Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

மூன்றாம் உலகம்

பலர் வாழ்வில் தவற விட்ட, தவிக்க விட்ட ஒரு உலகம்.... எனது இரண்டாவது சிறுகதை!!!

Exams, Sleep and Many more.....

A small journey into the unavoidable world of exams and evaluations.....

பயணம் - பகுதி 1

சில பயணங்கள் நம் வாழ்க்கை பயணத்தை முடிவு செய்யும் .... தமிழில் சிறுகதை புனைய நான் மேற்கொண்ட முதல் முயற்சி !!!

WHAT IS GOD!!!

For people who are searching who and where is God, this question might give some answers.....

POSTIVE, NEGATIVE, and NEUTRAL

Is the essence of our lives woven among these three factors? in continuation to post on IS IT A SIN TO BE BAD ?.....

IS IT A SIN TO BE BAD ?

Is doing bad things in life a part of our configuration or is it necessary to have bad things in life .....

IPL - A RAT RACE ?

Is IPL worth the hype it claims being the most competetive tournament or its just a RAT Race .....

சென்னையில் ஒரு விடுமுறைக்காலம்

Dedicated to all Engineers from Chennai who are breaking their heads out in an MNC in Bangalore...

Sunday, October 23, 2011

Exams, Sleep and many more


Thanks for coming by.... in the age of twitter and Facebook where communication is defined in one-liners or 140 characters, i really appreciate your effort to look at this blog post.

Before i begin let me ask you a question “Do you like giving exams?”, if its “Yes “ Please click on “X” mark on the right corner of your screen and get the hell outta here (and please start preparing for the upcoming exams)... on the contrary if you are like me who would say “No” even if i top my class (which will never happen even if knew the question paper one month before the exams), then continue reading.

One of the best ways to prepare for an exam
This blog post is coming up after a mixed bag of examinations that i gave in the past two weeks. Why do students hate giving exams... there are many things that keep changing in the world, why not this exams which was found at around 605AD in China (one of the few occurrences where the whole world copied something from the Chinese) Why do boys and girls go behind marks rather than going behind each other? 

“How to make exams attractive?”  So that people like me don’t crib and end up writing blogs
The answer is simple... try one Mr. Google, after googling the above question the top two results were 

1.   The Are u attractive? Test :: Create and Take Tests @ NerdTests.com
www.nerdtests.com/mq/take.php?id=1782
If you take this test, and you get a high score, it'll say you're attractive, which means you're every bit as hansome or pretty as you are. If you get low score, it'll say ...

2.   Men lose their minds speaking to pretty women - Telegraph
www.telegraph.co.uk/.../Men-lose-their-minds-speaking-to-pretty-wo...
3 Sep 2009 – Talking to an attractive woman really can make a man lose his mind, ...company of an attractive woman perform less well in tests designed to ...

Never knew Google had such a great sense of humor... i think they can change the name of the button “I`m feeling Lucky” to “I`m going nuts”

But if you look deeply into this Google search result, it has really provided the answer... it had just searched all over its database and provided the results which matched and results that are in its memory, which is exactly what students do before the exams. We memorize whatever we can and vomit it in the exams not really thinking if we are doing justice to our evaluation.

So what should we do to make sure we don’t vomit in exams and do it only when we are drunk? (After looking at the last search result I’m not searching this question in Google)

Make exams “Open Google”:
Give web access to everyone in the exam hall and ask them to find the answers. In this case the people who set the question paper will find it tough rather than people who are answering it. This will be an ultimate test since we just saw how Google answers questions.

Tweet the answers
If Google can help it, why not Twitter and Facebook. In the exam hall ask every student to tweet the answers. In this the evaluators will not have a tough time in reading pages and pages of stories that students like me write. 

Make Ra-One your exam sponsor


Ask every student to watch Ra-One and start asking questions based on the movie. I`m pretty sure that IIPM would be interested in this idea. 

And the last idea will be... hold for a second someone just sent a message in FB

“Dude!!! Results have come”. 
"WTF!!!!"

Saturday, May 21, 2011

பயணம் - பகுதி 3 (இறுதிப்பகுதி )

பயணம் பகுதி 1


பயணம் பகுதி 2 

பகுதி 3 இப்பொழுது 


காலையில் அம்மா என்னை எழுப்பும் குரல், பின்னால் இன்னொரு சத்தமும் கேட்கிறது சன் டிவியில் "இந்த நாள் இனிய நாள்", இனிய நாள்!!! ஆம் இன்று ஹரிதாவின் திருமணம், கடந்த ஒரு வாரம் என்னால் ஒரு விஷயத்தில் கூட கவனம் செலுத்த முடியவில்லை, பணிக்கு இன்னொரு வாரம் விடுமுறை அறிவித்தேன், வீட்டில் எல்லோரும் எனக்கு எதோ உடம்பு சரியில்லை என நினைக்க, நானோ எதுவும் செய்ய முடியாமல் ஒரு மூலையில் உட்காந்திருந்தேன். இன்று எனக்கு இன்னொரு குழப்பம் அந்த திருமணத்திற்கு   செல்ல வேண்டுமா ? என் இதயத்தை கிழித்தெடுக்கும் நிகழ்வை காண வேண்டுமா? என் வாழ்வில் ஹரிதாவை மொத்தமாய் இழக்கும் காட்சியை பார்க்க வேண்டுமா ?

ஆனால் திருமணத்திற்கு  கிளம்ப தயாரானேன், காரணம் ஒன்றே ஒன்று தான் மீண்டும் அவளை பார்க்கும் ஒரு வாய்ப்பு. கல்யாணம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணிநேரம் தான் இருக்கிறது, பல் தேய்க்க சென்ற போது பேஸ்ட் தீர்ந்துவிட்டது, பின்பு அருகில் இருக்கும் கடையில் சென்று வாங்கி வருவதற்குள் இன்னும் தாமதமாகிவிட்டது, விட்டை விட்டு வெளிய வரும்போது என் செல் போனை பார்த்தால் அதில் சுத்தமாக சார்ஜ் இல்லை. ஆனது ஆகட்டும் என வீட்டை விட்டு கிளம்பினேன். அந்த கல்யாண மண்டபம் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ளது, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சென்று ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும். 

வழக்கமாக என் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வர குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் ஆகும் ஆனால் இன்றோ 45 நிமிடத்தில் நுங்கம்பாக்கம் ரயிலடி வந்து சேர்ந்தேன். வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் ஒரு ஆட்டோ, மவுண்ட் ஸ்டேஷன் வந்த ஒரே நிமிடத்தில் ஒரு ட்ரைன், என எல்லா விஷயங்களும் வேகமாக நடந்தது. எந்த ஒரு விஷயத்தை செய்ய ரொம்ப தயங்குகிரோமோ அந்த விஷயத்திற்கு சாதகமாக அணைத்து சம்பவங்களும் நடக்கும் என்பது அன்றைக்கு நிருபனமானது.
நுங்கம்பாக்கத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி கடைசி சீட்டில் அமர்ந்தேன், கல்யாண மண்டபத்தின் பெயரை ஆட்டோக்காரனிடம் சொல்ல " ஏறு!!! பத்து ருபாய், சில்லறையா வச்சுக்குங்க" 

ஆட்டோவில் ஆரம்பித்த இந்த பயணம் முடிய இறுதியாக அதே ஆட்டோவில் சென்று கொண்டிருப்பதை நினைத்தேன், ஆட்டோ கல்யாண மண்டபத்தை நெருங்கியது.
எட்டி அந்த கல்யாண மண்டபத்தை பார்த்தேன் 



"Haritha Weds Ram"  இதயம் ஒரு விநாடி நின்றது, என்னால் அந்த மண்டபத்தை பார்க்க முடியவில்லை, அதே நேரம் ஆட்டோ மண்டபத்தை சென்றடைந்தது. 

"சார் நீங்க சொன்ன மண்டபம் இது தான்" என்றான் ஆடோக்காரன் 
எனக்கு வெளியே இறங்க தைரியம் இல்லை , அவள் பெயர் அருகில் இன்னொருவனின் பெயரைக்கூட பார்க்க முடியாத நான் எப்படி கல்யாண மண்டபத்தில் இன்னொருவன் அருகில்...... கல்யாணத்திற்கு செல்லும் யோசனையை கைவிட்டேன்.
"இது இல்லை நீங்க போங்க நான் சொல்றேன்" என சொல்ல ஆட்டோ கல்யாண மண்டபத்தை விட்டு விலகியது 
ஆட்டோ மண்டபத்தை விட்டு நகர என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது, இதை ஆட்டோவில் யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைந்து தலை குனிந்தேன், கண்களை மூடிக்கொண்டேன், என்னை அறியாமல் கணவுலகம் சென்றேன், நான் முதன் முதலில் அவளை ஆட்டோவில் பார்த்ததில் இருந்து அன்று பூங்காவில் கொடுத்த முதல் முத்தம் வரை அனைத்தும் வந்து சென்றன, உறக்கம் என்னை அறியாமல் ஆட்கொண்டது. 

"சார், என்ன காலையிலேயே தூக்கமா" ஆடோக்கரனின் குரல், மீண்டும் நிஜவுலகம் வந்தடைந்தேன்.
"அந்த மண்டபத்துல இறங்கனுன்னு சொன்னிங்க அப்புறமா இந்த இடம் இல்லன்னு சொல்லிட்டு இப்படி தூங்கிட்டு இருக்கீங்க...  பார்த்த படிச்சவுறு மாதிரி தெரியுது நீங்க எங்க தான் போனும்,"
"எப்படி தூங்கினேனே தெரியல இது எந்த இடம்"
"நல்லா கேட்டீங்க ... மொதலா கிழ இறங்குங்க.. ஆட்டோ இதுக்கு மேல போகாது இது அண்ணா ஆர்ச்"
"அவ்வொலோ தூரம் வந்துட்டேன்னா, நீங்க திருப்பி நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வழிய தானா போவிங்க, நான் அப்பிடியே ஸ்டேஷன்ல இறங்கிக்கிறேன்"
"ஸ்டேஷன் வழியா தான் போவேன் ஆனா ஆட்டோ முழுசா சவாரி வந்ததுக்கப்போரம் தான் எடுப்பேன், கொஞ்சம் டைம் ஆவும் வேற எதாவது ஆட்டோ புடிச்சு போ "
"பரவாயில்லை நான் இங்கயே இருக்கேன் "
"சரி என்னோமோ பண்ணுங்க காசு கொடுத்தா சரி"

அந்த ஆட்டோ மீண்டும் சில மக்களுடன் நுங்கம்பாக்கம் நோக்கி புறப்பட்டது, இந்த முறை தூங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், ஆட்டோ மீண்டும் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நுழைந்தது, வழியில் ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றியும் இறக்கியும் விட்டவாறு சென்று கொண்டிருந்தது. இந்த ஆடோவுக்கும் நம் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஒரு இடத்தில் ஏறி இன்னொரு இடத்தில இறங்குவது போல தான் நாம் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிலர் வந்து செல்கிறார்கள். 

இந்த யோசனையில் இருக்கும் போது மீண்டும் கல்யாண மண்டபம் நோக்கி ஆட்டோ சென்றுகொண்டிருந்தது, மறுபடியும் அந்த பெயர் பலகையை பார்க்க எனக்கு தைரியம் இல்லை, தலையை குனிந்துகொண்டேன் கண்களை மூடிக்கொண்டேன் மீண்டும் தூங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன். அதே போல் ஆங்காங்கு நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றது அந்த ஆட்டோ . சிறுது நேரத்தில் ஆட்டோ முழுவது நிரம்பி இருந்தது, ஏதாவது ஒரு சத்தமான இடத்தில கண்களை மூடிக்கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் உலகத்தில் உள்ள எல்லா சத்தங்களும் தெள்ளத்தெளிவாக கேட்கும்.... நான் கேட்ட சில சத்தங்கள்

"ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் ... இந்த உலகத்தில் எவனுமே இராமன் இல்லை " எப்ம் ரேடியோவில் லேசாக கேட்ட பாடல் 
" டேய் பொறம்போக்கு ஓரமா போடா " ஆடோக்கரனின் வசைமொழி
"தெனமும் இந்த டிராபிக்... " அலுவலகத்திற்கு வேகமாக செல்ல வேண்டிய ஒருவரின் ஏமாற்றம் 
"இருவிழி உனது இமைகளும் உனது ", எனக்கு மிகவும் பிடித்த பாடல், ஆட்டோவில் யாரோ ஒருவரின் ரிங் டோன் 
"சார் இந்த பாஸ்போர்ட் ஆபீசிக்கு எங்க இறங்கனும் ", " இந்த ஆட்டோ அந்த வழிய தாம்பா போகும் ஆபீஸ் முன்னாடியே இறங்கிக்கலாம்" இந்தியாவிலருந்து ஏற்றுமதி ஆக ஒருவன் வழி கேட்டுகொண்டிருந்தான் 


இவ்வாறாக பல சத்தங்கள்..... இந்த எப்ம் ரேடியோ சத்தத்தால் மற்ற சத்தங்கள் சரியாக கேட்கவில்லை, சிறுது நேரத்தில் ரேடியோவில் பாடல் முடிந்தது, இப்போது ஆட்டோவில் இருக்கும் பேச்சு சத்தம் சற்று தெளிவாக கேட்கிறது, 
"நான் அவர் கிட்டே பேசிட்டேன் அவர் என் Decision ரொம்ப சரின்னு சொன்னாரு, நான் ரொம்ப யோசிச்சிதான் இந்த முடிவ எடுத்தேன்" செல்போனில் யாரோ பேசும் குரல், என்னை தூக்கிவாரிபோட்டது அந்த குரல், யாரோ பேசும் குரல் அல்ல அது ஹரிதாவின் குரல். நான் தலை குனிந்து இந்த உலகத்திலுள்ள சத்தங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் போது அவள் இதே ஆட்டோவில் முதல் சீட்டில் அமர்ந்திருந்தாள், திருமண கோலத்தில் அவள் இல்லை, என்ன நடந்தது?...... உலகத்தில் உள்ள எல்லா சத்தங்களும் அடங்கியது, என் இதயத்துடிப்பும் அவள் குரல் மட்டுமே என் காதில் விழுந்தது, அவள் செல் போன் பேச்சை தொடர்ந்தாள்

"அம்மா நீ சொல்றது கரெக்ட் இத நான் அப்போவே சொல்லி இருக்கலாம், ஆனா அப்போ நான் அவனை பார்கலையே, ராம் நல்லவரு தான் ஆனா சதீஷ் is made for me and he is mad on me" 
நான் திரும்பி மேல பார்த்தேன் ஆண்டவனை தேடி ஆனால் ஆட்டோவின் கூரை தான் தெரிந்தது, மீண்டும் அவள் பேச்சை தொடர்ந்தாள்.

"கல்யாணம் நின்னு போச்சுன்னு எல்லாரும் கோபமா இருபாங்க நீதான் சமாதானப்படுதனும்", " நான் இப்போ ஆட்டோல போய்கிட்டு இருக்கேன்... சதிஷ பார்கத்தான், ரொம்ப நேரமா அவன் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு. அன்னைக்கே ரொம்ப சோகமா கிளம்பி போனான் அதுக்கப்புறம் பேசவே இல்லை "

அப்போது தான் என் செல் போனை பார்த்தேன் பாட்டரி சார்ஜ் இல்லாமல் Switch ஆப் ஆகியிருந்தது. இறுதியாக ஆட்டோ நுங்கம்பாக்கம ரயிலடி வந்து சேர நான் இறங்க தயாரானேன். எனக்கு முன்னால் அவள் இறங்கினாள், அவள் ஆடோக்கரனிடம் நூறு ருபாய் கொடுக்க, அவன் அவளிடம் சில்லறை கேட்டு சண்டை பிடிக்க... நான் பின்னால் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன், அன்றில்லிருந்து இன்று வரை இவளுக்கு இதே சில்லறை பிரச்சனை.

ஆடோக்காரன் என்னை பார்த்து "சார் சில்லறை இருக்கா, காலையில இது தான் இரண்டாவது சவாரி எல்லாரும் நூறு ருபாய் கொடுத்தா நான் எங்க போறது " 
அவள் திரும்பி என்னை பார்த்தாள் ஒரு நிமிடம் அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, அவளுக்கும் சேர்த்து நான் ஆடோக்கரனுக்கு கொடுக்க அவன் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தபடி ஆட்டோவை கிளப்பினான் 

"இவ்வோளோ நேரம் இதே ஆட்டோல தான் இருந்தியா?" நான் சிரித்தபடி தலை அசைத்தேன்
"அப்போ போன்ல பேசின எல்லாத்தையும் கேட்டுட்ட ", மீண்டும் நான் சிரித்தேன் 

"இங்க என்ன பண்ற " என்றாள் சற்று கோபத்துடன் 
"நான் கேட்க வேண்டிய கேள்வி உனக்கு தான் கல்யாணம், யாரோ சொன்னியே Mr.Niceguy,Open Minded ... இங்க என்ன பண்றே "
"நீ மொதல்ல சொல்லு "
"நீ தான் அன்னைக்கி பார்க்குல, 'என் கல்யாணத்துக்கு வருவல்ல ?'  அப்பிடின்னு கேட்ட, அதனால தான் வந்தேன். இப்போ சொல்லு ... என்னை மாதிரி கவிதையெல்லாம் எழுதுவாருன்னு சொன்ன " 
"அன்னைக்கி பார்க்குல நான் மட்டும் தான் பேசினேனா? போறதுக்கு முன்னாடி நீ என்ன சொன்ன "
"பார்க்குல ஏதேதோ சொன்னேன், இப்போ எதுவும் ஞாபகம் இல்லை "
"எப்படி இருக்கும் ... கல்யாணத்துக்கு வருவியான்னு கேட்டா ' பேசாம செத்துறலாமுன்னு ' சொல்லிட்டு நீ பாட்டுக்கு கிளம்பிட்ட , இந்த ஒரு வாரம் நான் தூங்கவே இல்லை, அம்மா, அப்பா, சொந்தகாரங்க, அவுங்க அம்மா அப்பா, எல்லாரயும் convince பண்ணி கல்யாணத்தை நிறுத்த நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும், நீ பாட்டுக்கு ஜாலியா வந்து இங்க என்ன பண்றேன்னு கேக்குற"

"இப்படி அவசர பட்டு கல்யாணத்தை நிறுத்திடியே!! நாளை பின்ன உன்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க" என்றேன் ஒரு அசட்டுச்சிரிப்புடன்

"என்ன சொன்ன யாரு கல்யாணம் ....." என்னை அடிக்க வெறித்தனத்துடன் துரத்த ஆரம்பித்தாள்... நானும் ஓட ஆரம்பித்தேன் 


பயணங்கள் என்றும் முடிவதில்லை 

பின்குறிப்பு இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம்.  மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள். மற்ற பகுதிகளுக்கான இணைப்புகள்.

Friday, May 20, 2011

பயணம் - பகுதி 2



பகுதி 2:  ஆறு வருடங்கள் கழித்து 
காலை 9 மணி 


இன்று இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்  இருக்கும் ஒரு கனவு, சொல்ல போனால் பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கும் ஒரு காரியத்தை இப்போது தான் முடித்தேன். ஆம் பதினெட்டு மாதம் கடல் கடந்து எதோ ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு தினக்கூலி செய்து முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன். கொஞ்சம் ஸ்டைலாக சொல்ல வேண்டுமானால் onsite இல் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் ஆகிறது. 

கடல் கடந்து செல்லும் போது ஏதோ ஒரு பெரிய விஷயம் நமக்காக காத்திருப்பது போல இருக்கும், அனால் அங்கு சென்ற பின்பு தான் தினம் தினம் கட்டிட வேலை செய்யும் கொத்தனாருக்கும் நமக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை என்பது புரியும். என்ன அவன் நம்ம ஊருல வெட்ட வெயில கொறஞ்ச சம்பளத்துக்கு வேலை பார்பான் ஆனா நானோ அமெரிக்காவில் அதி நவீன அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். நம்ம ஊரில் ஒரு கொத்தனாருக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் இந்தியாவில் இருந்து வந்த எனக்கு. ஆனாலும் சம்பளம் டாலர்சில் வருகிறதே,..... இந்த டாலர் மட்டும் இல்லை என்றால் இந்நாட்டை பற்றி நமக்கு தெரித்திருக்க வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்த வரை நான் அமெரிக்கா சென்றதற்கு கிடைத்த ஒரே பலன் அங்கு போய் ஊர் சுற்றி பார்த்ததுதான். Times Square, Las Vegas, Grand Canyon, Statue of Liberty இங்கெல்லாம் சென்று புகைப்படம் எடுத்து Facebook இல் போட்டு இந்தியாவில் இருக்கும் பலருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியது தான்  நான் செஞ்ச ஒரே நல்ல காரியம். 


கடந்த ஒரு வாரமாக காலையில் எழுந்திரிப்பது கொஞ்சம் சுலபமாக இருந்தது, வழக்கமா கஷ்டமா இருக்கும் என்பார்கள். முன்பெல்லாம் தினமும் அம்மா எழுப்பிவிடும் சத்தத்துடன் என் நாள் தொடங்கும். ஆனால் இப்போது அம்மா "பையன் அமெரிக்காவில் இருந்து இப்போ தானே வந்தான் நம்ம ஊரு நேரத்துக்கு வர கொஞ்ச கஷ்டமா இருக்கும்"  என நினைத்து என்னை எழுப்புவதே இல்லை.ஆனால் அமெரிக்க சென்றாலும் செல்லாவிட்டாலும் நான் காலையில் சீக்கிரமாக எழுந்ததாக சரித்திரமே கிடையாது. 


இன்று எழுந்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு ... ஆம் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும், அமெரிக்காவில் செய்த தின கூலி பற்றிய ஒரு ரிப்போர்ட் ஒரு மீட்டிங் என பல தேவை இல்லாத விஷயங்கள் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லை அமெரிக்காவில் இருந்து கிலோ கணக்கில் கொண்டுவந்த இனிப்பையும் கொடுக்க வேண்டும். நான் அமெரிக்க சென்ற இந்த சில மாதங்களில் நான் முக்கியமாக இழந்த ஒரு விஷயம் எனது பைக். பல நாட்கள் கேட்பாரற்று கிடந்தது இறுதியில் என் தம்பி அதை பெங்களூர் கொண்டு போய் விட்டான். 


ஒரு வழியாக பத்தரை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றேன். அமெரிக்காவில் இருந்த வந்த எனக்கு சென்னை வெயில் சற்று கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இருபது வருடம் இந்த ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பதினெட்டு மாத வனவாசத்தில் மாறி விடாது என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்ச நாளில் எல்லாம் பழய நிலைமைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது ஒரு ஆட்டோ என் அருகில் வந்து நின்றது.

"எங்க சார் ஸ்டேஷன் போறிங்களா" என்றான்
"மவுண்ட் ஸ்டேஷன் எவ்வளோ " என்றேன்
"வழக்கம் போல தான் சார் இருபது ருபாய்"  என்றான்
நானும் ஏற்கனவே தாமதம் ஆனதாலும் கையில் ஒரு கிலோ சாக்லேட் இருப்பதாலும் ஆட்டோவில் ஏறினேன். நான் ஏற என் கூட இன்னொருவரும் ஏறி பின் சீட்டில் அமர ஆட்டோ கிளம்பியது. கையில் இருக்கும் சாக்லேட் பையை என் கால் அருகில் வைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு perfume என் மூக்கை தொளைத்தது. இது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசம், என்னை கவர்ந்த வாசம், ஆம் ஹரிதாவின் perfume சற்று திரும்பினேன் வாசம் மட்டும்மல்ல வாசத்தின் சொந்தகாரியும் அமர்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் இளையராஜா பாடல் போல் சீராக அடித்துகொண்டிருந்த என் இதயம் யுவன் ஷங்கர் ராஜா பாடல் போல் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. 

ஆம் மீண்டும் ஒரு பயணம், ஹரிதாவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை காதில் earphone கையில் i-pod . இன்றும் அதே போல் பாலிஷ் செய்த நகங்கள், புதிய தங்க மோதிரம் 
"தங்கம் அழகா !!! இல்லை அதை அணிந்த இந்த விரல் அழகா !!!" சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தினாலும்,நாட்டமை  சரத்குமாரை கூப்பிட்டு தீர்ப்பு சொல்ல சொன்னாலும், கண்டு பிடிக்க  முடியாத காரியம். 
நான் இந்த ஆராய்ச்சியில் நான் முழு வீச்சில் இருக்கும் போது அவள் வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள், அந்த நேரம் பார்த்து ஆட்டோ ஒரு பள்ளத்தில் இறங்க, அவள் என் மேல் லேசாக இடிக்க, அரசாங்கம் என் இத்தனை வருசமாக ரோடு போடாமல் இருந்த காரணம் இன்று தான் எனக்கு புரிந்தது. 

என்னை பார்த்து திரும்பி சாரி என்று சொல்ல முற்பட்ட அவளால் "சா" வை தவிர வேற வார்த்தைகள் பேச முடியவில்லை. 
காதில் I-Pod இருந்தாலும் அவளுக்கு அதில் ஒரு பாடலும் கேட்கவில்லை 

காதில் இருந்த earphone ஐ மெல்ல கழட்டினாள், எதோ சொல்ல போகிறாள் என நினைத்தேன், ஆனால் எதுவும் சொல்லாமல் குனிந்துவிட்டாள். அவளால் என்னை புறகணிக்க முடியவில்லை அதே நேரம் பேசவும் முடியவில்லை. ஆறு வருடத்திற்கு முன்னால் இருந்த அந்த நட்பு, அந்த சுதந்திரம் இல்லை. எனக்கும் அதே நிலைமை தான், எல்லாவற்றிக்கும் காரணம் என் கடைசி வருட சுற்றுலா, அதிலும் இறுதி நாள் நடந்த Campfire .

"எறிந்தது விறகுகள் மட்டுமல்ல என காதல் சிறகுகளும் தான் "

பல வருடங்கள் கழித்து ஒரு கவிதை மீண்டும் அவளால். 

மூன்று வருடங்களுக்கு முன்னால், எல்லோரும் கல்லூரி வாழ்கையை துறந்து கார்பரேட் வாழ்கையை நோக்கி பொய் கொண்டிருந்த சமயம், கல்லூரியின் இறுதி ஆண்டு. நண்பர்களுடன் இறுதி சுற்றுலா. என் வாழ்கையை வதம் செய்த இடம் மூனார்.

அன்று ட்ரைனில் ஆரம்பித்த நட்பு இந்த சுற்றுலா வரை நீடித்தது, காலேஜ் கேண்டீன், சினிமா, பீச், ஸ்பென்சர், மகாபலிபுரம், சத்யம் தியேட்டர் என சென்னையில் எங்கள் இருவரின் பாதங்கள் பதியாத இடமே இல்லை.

கல்லூரியில் எங்களுக்குள் இருந்த நட்பை பற்றி அரசல் புரசலாக பேச்சு அடிபட்டாலும் அதை பற்றி ஒன்னும் தெரியாதது போல் நடந்தேன். அவள் என்னை பற்றி எப்படி நினைத்தாளோ தெரியவில்லை ஆனால் நான் ஆவலுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம். என் சந்தோசம் அந்த இறைவனுக்கே பிடிக்கவில்லை போல, தவம் செய்யாமல் கிடைத்த வரமல்லவா ?

ஓர் அழகான ரோஜா தோட்டத்தில் ஒரு அழகான தென்றல் வீசுவது போல் என் காதலை சொல்ல ஒரு தருணத்தை எதிர் பார்த்துகொண்டிருக்கும் பொது கொழுந்துவிட்டு எரியும் காட்டுதீ போல் என் வாழ்வில் நடந்த அந்த Camp Fire. கல்லூரியின் கடைசி ஆண்டு, கடைசி சுற்றுலா, கடைசி பார்ட்டி, கொஞ்சம் விஸ்கி இதெல்லாம் கூட என்னை எதுவும் செய்யவில்லை. அந்த Camp Fire இல் பாடல் ஒலிக்க அனைவரும் ஆட, அவளும் ஆட ஆரம்பித்தாள், இரண்டு round விஸ்கி உள்ளே சென்று இருந்தாலும் அதில் கிடைக்காத போதை அவள் ஆட்டத்தில் கிடைத்தது. 

"மச்சான் சதீஸ் உன் ஆளு பின்னி பெடல் எடுக்குறா" என்ற விமர்சனத்துடன் அடுத்த ரௌண்டுக்கு தயாரானேன் 

அப்போது தான் பிரவீன் ஆட்டதுக்குள் நுழைந்தான். யார் இந்த பிரவீன் என்று கேட்பர்வகளுக்கு, "அவனை பற்றி பெருசா சொல்ல எதுவுமே இல்ல தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலே எந்த ஒரு காலேஜ் போனாலும் அங்க ஒண்ணுக்கும் உதவாத, எதுவுமே தெரியாத, ஆனா பக்காவா சீன் போடுற ஒருத்தன் இருப்பான் அவன் தான் இந்த பிரவீன்"
ஹரிதா உடன் அவன் சேர்ந்து ஆட விஸ்கியுடன் சேர்ந்த எனது இரத்தம் Campfire நெருப்பை விட அதிகமாக  கொத்திக்க ஆரம்பித்தது. " டேய் மாப்பு என்னடா இது எந்த நாய அடிச்சு துரத்து டா" என சிலர் ஏத்தி விட ஏன் வாழ்வின் மிக பெரிய தவறை செய்ய முற்பட்டேன்.தெருவில் நாம் செல்லும் போது ஒரு நாய் கடிக்க வந்தால் நாயை விட்டு தூர விலகுவது சாமர்த்தியமா அல்லது நாயை துரத்த கல்லை தேடுவது சாமர்த்தியமா

இதை தான் நானும் செய்தேன், நேராக களத்தில் இறங்கி அவள் கையை பிடித்தேன் அவள் நானும் ஆட வருகிறேன் என நினைத்து சிரிக்க அவளை பிடித்து அந்த இடத்திலிருந்து கூட்டி வந்தேன், இதை சுற்றி நிற்பவர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க அவளுக்கு சற்று கோபம் வந்து விட்டது. 

அன்று நடந்த வாக்குவாதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை

நான் அவள் கையை பிடித்து இழுத்து செல்ல 

"ஏய் என்ன பண்ற எல்லாரும் பாக்குறாங்க?"
"உனக்கு தான் என்ன செய்றேன்னு புரியல" 

"சதிஷ் என்ன பார்த்து பேசு தண்ணி அடிசுருக்கியா"
"அது இப்போ முக்கியம் இல்ல, உன் கூட ஆடிகிட்டு இருந்தானே அவன் என்னை விட ஜாஸ்தியா அடிச்சுருக்கான், தெரியுமா ?"

"அதுக்கு இப்படியா புடிச்சு இழுத்துட்டு வருவ, அதை விடு இது என்ன புது பழக்கம் தண்ணி அடிக்கிறது"
"சுத்தி சுத்தி அங்கேயே வராத, இன்னும் கொஞ்ச நேரம் ஆடி இருந்தேனா அந்த நாய் எதாவது பண்ணி இருப்பான் "

"அவன் தண்ணி அடிச்சுருக்கான் அப்பிடின்னு நீ சொல்ற நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா,, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்"
"கிழியும் அதான் பார்த்தேனே"

"என்ன பார்த்த சும்மா தண்ணி அடிச்சுட்டு ஒளர வேண்டியது "
"என்ன எப்போ பார்த்தாலும் தண்ணி அடிக்கிறேன் தண்ணி அடிகிறேன்னு சொல்ற ஏன் இஷ்டம் நான் தண்ணி அடிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை "
"அப்பிடியா அதே மாதிரி தான் நான் எப்படி வேணாலும் ஆடுவேன் உனக்கு என்ன பிரச்சனை நீ யாரு அத பத்தி கேக்குறது"
"நான் யாரா? இவ்வோளோ நாளா ........ நான் நம்மள பத்தி என்னனமோ "


"என்ன சொல்ற ஒன்னும் புரியல "
"உங்களுக்கு எல்லாம் எப்படி புரியும், புரியிற மாதிரி சொல்றேன் உன்னை எப்போ பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் வாழ்கைன்னு, உன் கூட பழகினினதுகப்பரம் தான் நான் எடுத்த முடிவு எவ்வளோ சரின்னு தோணிச்சு, இதை ஒரு நல்ல சமயம் பார்த்து சொல்லலாம்னு நெனச்சேன், உன் மனசிலையும் துளி அளவு என் மேல ஒரு impression இருக்கும்னு ....
ச்சே இன்னிக்கி பார்த்து....  இப்போ சொல்லு நான் பண்ணுனது சரியா தப்பா"


எவ்வளவு நேரம் என் வார்த்தைக்கு ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல் சண்டை போட்டு கொண்டிருந்தவள் சற்று மௌனமானாள். 


"அன்று இறைவன் என்னிடம் கொடுத்த வரத்தை பிடிங்கிக்கொண்டான் 
அலை போல் வேச வேண்டிய கடலை புயலாக மாற்றி விட்டேன்
அழகாக சொல்ல வேண்டிய காதலை ஆக்ரோஷத்துடன் சொல்லி விட்டேன் 


இதற்க்கு தான் உனக்கு இந்த வரமா ??"


கொஞ்ச நேரம் கழித்து 
"இவ்வோளோ நாள் இப்படிதான் என் கூட ..." என் கூட பேச விருப்பமில்லாமல் விலகிச்சென்றாள்.
என்னிடம் அவள் பேசிய கடைசி வார்த்தைகள். அந்த சம்பவம் நடந்த பின்பு அவள் என்னிடம் பேசவே இல்லை, எனக்கோ நான் எதோ பெரிய தவறு செய்தது போல் குற்ற உணர்ச்சியில் அவளை பார்ப்பதை தவிர்த்தேன். இதற்கு ஏற்றாற்போல் Campus Interview பரீட்சை என என்னை வேறு விஷயத்தில் ஈடுபடுத்திக்கொண்டேன். அவளுக்கு இன்போசிசில் வேலை கிடைக்க நான் கடைசி வரை எந்த வேலையும் கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினேன். அவளை பார்க்க கூடாது என நினைத்து farewell party கூட செல்லாமல் தவிர்த்துவிட்டேன். 

Farewell Party சென்ற நண்பர்கள் அவள் என்னை கேட்டதாக சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஆனால் அப்போது பசங்க சும்மா ஓட்டுறாங்க என நினைத்து அதை பெருசாக எடுக்கவில்லை.

"சார் மவுண்ட் ஸ்டேஷன், இறங்குங்க!!! அப்புறமா வெளிய நின்னு யோசிங்க" ஒரே வரியில் ஆறு வருஷத்திற்கு முன்னால் இருந்த என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
நான் கீழே இறங்கி இருபது ருபாய் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவளை நோக்கினேன் அவளும் என்னை பார்த்தாள்
"எப்படி இருக்கே " என வினவினாள்
"ஏதோ உயிரோட இருக்கேன் " என்றேன். ஏன் அப்படி ஒரு பதிலை சொன்னேன் என இன்று வரை எனக்கு புரியவில்லை, ஒரு வேலை பிளாஷ் பாக் effect ன்னு நினைக்கிறன் 

அப்போது அவளிடம் இந்த இடம் ஞாபகம் இருகிறதா இங்கு தான் நாம் முதலில் பேச ஆரம்பித்தோம் என சொல்ல நினைத்தேன், ஆனால் மனதில் ஒலித்த குரல் மனதிற்குள்ளே மறைந்தது 

"காலேஜ் Farewell Party க்கு கூட நீ வரல.. எங்க போன இவ்வோளோ நாளா ?"
"இல்ல கொஞ்ச நாள் பெங்களூர்ல இருந்தேன் அப்புறம் Onsite ஒரு 18 months , இரண்டு வாரம் முன்னாடி தான் வந்தேன்"
"நீ New Jersey போயிருந்த கரெக்டா ? நான் facebook ல pics பார்த்தேன்"
"ஆனா நீ என் Friends List ல இல்லேயே"
"உன் Friends Listla இருந்தா தான் பார்க்க முடியுமா, mutual Friends இருந்தாலும் பார்க்கலாம் தெரியுமா"

இதுல இப்படி ஒரு உள்குத்து இருப்பதை மறந்து போனேன்

"சரி டிக்கெட் எடுத்துட்டு வரேன் " என்றேன் 
"இல்ல எனக்கு டைம் ஆச்சு ட்ரைன் வந்துடும்.. உன் ஆபீஸ் எங்க ?"
"நுங்கம்பாக்கம் Haddows ரோடு"
"என் ஆபீசும் அங்க தான் இருக்கு "Scope International"" உன் ஆபீஸ் எங்க ?"

"அங்க தான் Pycrofts Garden ரோட்ல Keane India  கேள்வி பட்டுரிக்கியா "
"ஹ்ம்ம் தெரியும்... சரி உன் நம்பர் கொடு கால் பண்றேன் ஒரு முக்கியமான விஷயம் ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா உன்னை பிடிக்கவே முடியல "

என் நம்பரை அவள் செல் போனில் ஸ்டோர் செய்தாள், மீண்டும் என்னக்குள் ஒரு குரல் 

"அவள் ஒவ்வொரு செல்லிலும் செல்ல வேண்டிய நான் - இறுதியாக 
 அவள் செல் போனில் நம்பர்ஆக போய் சேர்ந்தேன் "

மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றாள். அப்போது தான் ஞாபகம் வந்தது என் நம்பரை கொடுத்தேன் அவள் நம்பரை வாங்க மறந்துவிட்டேன்.  என் செல் போன் நம்பருக்கும் என் இதயத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை இரண்டையும் அவளிடம் கொடுத்தேனே தவிர அவளிடம் இருந்து பதிலுக்கு எதுவும் வாங்கவில்லை.

அவளை சந்தித்து இரண்டு நாட்களுக்கு பின்பு அவள் என்னை அழைத்தாள், அந்த அழைப்பு வரும் வரை என் செல் போனில் நான் ஒரு அழைப்பை கூட தவற விட்டதில்லை, கிரெடிட் கார்டு அழைபில்லிருந்து காலர் டியுன் அழைப்பு வரை எதையுமே தவற விடவில்லை. ஏன் பல மீட்டிங்யில் இருந்து வெளி நடப்பு செய்து செல்போன் அழைப்பை எடுத்ததுண்டு.

இறுதியாக அன்று "சதீஷ் இன்னக்கி சாயங்காலம் மீட் பண்ணலாமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்", காதில் தேண் வந்து பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அன்று அதை முதல் முறையாக அனுபவித்தேன். 

இருவரும் காபி டே வில் சந்தித்தோம், அந்த சந்திப்பு என் வாழ்வை மாற்றிய சந்திப்பு

அழகான ஒரு வெள்ளை சுடிதாரில் எனக்கு முன் வந்து அமர்ந்தாள். 

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா ?" என்றாள்
"இல்லை இப்போ தான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்"

உனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த எனக்கு இந்த பத்து நிமிஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை. என சொல்லலாம் என்று தோன்றியது.அவள் ஏதோ ஒரு இட்டாலியன் காபி ஆர்டர் செய்ய நான் வழக்கம் போல் ஐஸ் டீ சொன்னேன். என்னதான் அவள் என்னுடன் சகஜமாக பழகினாலும் என்னால் அந்த campfire சம்பவத்தை மறக்கமுடியவில்லை அதே நேரம் அதை மறைக்கவும் முடியவில்லை 

"சதீஷ் அன்னைக்கும் பார்த்தேன் இப்போவும் பார்க்குறேன் ஏன் முகத்தை எங்கயோ திருப்பி வச்சுக்கிட்டு பேசுற, நம்ம டூர்ல நடந்த விஷயத்த இன்னுமா நினைச்சுகிட்டு இருக்க ?"

"கரெக்டா கண்டுபுடிச்சிட்டா" என நினைத்துக்கொண்டு " அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை இத்தனை நாள் கழிச்சு உன்னை மீட் பண்ணுவேன்னு நான்....." வார்த்தைகள் தடுமாறின 

"இன்னும் பழசெல்லாம் நீ மறக்கல?  நானும் அன்னக்கி கொஞ்ச கோபபட்டுடேன், நீ வேற அன்னைக்கி  தெளிவாயில்லை , பரவாயில்லை அதேயே ஏன் யோசிச்சுகிட்டு" 
நான் அன்று செய்த தவறுக்கான தண்டனை முடிந்தது என தோன்றியது அவளுடன் சற்று சகஜமாக பேச ஆரம்பித்தேன், இட்டாலியன் காபி மற்றும் ஐஸ் டீ உடன் பழய கல்லூரி நண்பர்கள், ஆபீஸ் தோழர்கள் அமெரிக்க அனுபவம் எல்லாம் வந்து சென்றது. அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த சாக்லேட்யில் சிலவற்றை அவளிடம் கொடுத்தேன், அதில் அவளுக்கு  மிக பிடித்த டார்க் சாக்லேட்டும் அடக்கம். அதை பார்த்த உடன் 
"நீ இன்னும் மறக்கல கரெக்டா எனக்கு புடிச்ச டார்க் சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்க"

காபி டேவிலுருந்து கிளம்பினோம், நுங்கம்பாக்கத்தில் Wallace Garden ரோட்டில் நடக்க ஆரம்பித்தோம், சென்னையின் மைய பகுதியான நுங்கம்பாக்கத்தில் இப்படி ஒரு அமைதியான சாலை, ஒரு வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள் Wallace Garden குறுக்கு தெரு. 

"இங்க ஒரு பெரிய பார்க் இருக்கு பார்த்திருக்கியா" என கேட்டேன் 
"பார்க்கா இங்கயா, எப்படி போனும் " 
"பக்கம் தான் 5 minutes walk, வா போலாம் " என்றேன் 
அமைதியான அந்த பூங்காவினுள் நுழைந்தோம், எங்களை தவிர அந்த பூங்காவினுள் இரண்டு காதல் ஜோடி ஓரமாக வெயிலுக்கு பயந்து நிழலில் மறைதிருந்தந்து.

"இங்க இப்படி ஒரு பார்க் இருக்கா, எனக்கு தெரியவே தெரியாது, நீ தினமும் வருவ போல, ஹ்ம்ம் யார்கூட ?"
"அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது, நான் இந்த சென்னை ஆபீஸ் ஜாயின் பண்ணியே மூணு நாள் தான் ஆச்சு, நேத்து தான் இந்த பக்கம் வரும் போது பார்த்தேன்" 

"அப்பாடி இப்பவாது சிரிச்சியே, அன்னக்கி உன்னை ஆட்டோல பார்த்ததிலிருந்து இன்னக்கி காபி டே வரைக்கும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்த, இப்போதான் நார்மலா பேசுற, இன்னும் கவிதையெல்லாம் எழுதுறியா? இன்ஸ்டன்ட் கவிதையெல்லாம் சொல்லுவியே ஒன்னு சொல்லு பார்போம் "

"அத விட்டு ரொம்ப நாள் ஆச்சு, அன்னக்கி நடந்த விஷயம் .... என்னால எதுவுமே யோசிக்க முடியல "

"இன்னும் ஏன் அதேயே பேசிகிட்டு இருக்கே, நான் தான் மறந்துட்டேன்னு சொல்லுறேன்ல, அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு நீ ஏதேதோ பேசிட்டே, இன்னும் அதேயே யோசிச்சிகிட்டு இருக்காத " 

"உனக்கு இன்னும் புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா ? அன்னைக்கி நான் தண்ணி அடிச்சிருந்தேன் ஒத்துக்கிறேன், ஆனா நான் பேசுனது எல்லாமே உண்மை, இத்தனை நாள் எத்தனையோ பொண்ணுங்கள பார்த்துருக்கேன், ஆனா உன்னை மாதிரி யாரையும் பார்த்ததில்லை, இன்னக்கி காபி டேல என் முகத்தை வச்சே நான் என்ன மனுசுல என்ன ஓடுதுன்னு கண்டு புடிச்சே!!! சத்தியமா சொல்றேன் எந்த பொண்ணும் என்னை இந்த அளவு புரிஞ்சுகிட்டது கிடையாது. அன்னைக்கி உன்னை ஆட்டோவில பார்த்துக்கு அப்புறம் என்னை அறியாமலே கவிதை சொல்ல ஆரம்பிச்சேன். அன்னைக்கி நான் என் காதலா சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம் ஆனா இன்னக்கி வரைக்கும் உன்னை தவிர இன்னொரு பொண்ண என்னால யோசிச்சுக்கூட பார்க்க முடியாது." 

நான் என்னை மறந்து பேசிகொண்டிருக்க அவள் சற்று விலக ஆரம்பித்தாள், வாழ்கையில் அவளை மறுபடியும் இழக்க எனக்கு மனமில்லை அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்தேன், அவள் கண்களை நோக்கினேன் கண்ணிர் நிரம்பி இருந்தது, மீண்டும் பேச ஆரம்பித்தேன்.

"என் வாழ்கையில உன்னோட impact இவ்வோளோ இருக்கு, உன் life ல .... என்னை பத்தி நீ யோசிச்சதே கெடயாது நான் என்ன அவ்வளவு மோசமா"
"ப்ளீஸ் சதீஷ் இதுக்கு மேல பேசாத, நாம மீட் பண்ணி இருக்கவே கூடாது, என்ன பாக்கவே இல்லன்னு நினைச்சிக்கோ , நான் கிளம்புறேன்..." அவள் வார்த்தைகளும் தடுமாற ஆரம்பித்தது 

அவள் கரத்தை சற்று இறுக்கி பிடித்தேன் 
"இல்லை இன்னைக்கி ஒரு பதில் சொல்லிட்டு போ, அன்னைக்கி நீ எதுவுமே சொல்லாம போயிட்ட , அந்த மௌனத்தில் இருந்து வெளிய வரவே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு, மறுபடியும் ஒன்னும்சொல்லாம போனா எனக்கு பையித்தியம் புடிச்சுடும், எதாவது சொல்லு "
"என்ன சொல்ல சொல்லுற, உன் கவிதை எனக்கு பிடிக்காதுனு சொல்ல சொல்றியா, இல்ல உன்ன மாதிரி ஒருத்தன நானும் பார்ததில்லன்னு சொல்ல சொல்லுறியா  .... " அவள் கண்களில் நீர் தழும்ப அரம்பிதத்து 
அவள் கண்ணீரை மெல்ல துடைத்தேன், லேசாக குனிந்தேன் அவள் கண்ணிர் இன்னும் நிற்கவில்லை, அந்த தருணம், அந்த கண்ணிர், அந்த வார்த்தைகள் என்னை என்ன செய்ததென்று புரியவில்லை, அவள் இதழோடு இதழ் பதித்தேன், சில வினாடிகள் உலகம் இருண்டது, இத்தனை நாள் என் மனதில் இருந்த வலி,ஏக்கம், சோகம் எல்லாவற்றையும் இந்த சில வினாடிகள் மறக்கச்செய்தது, அவளும் என்னை தடுக்கவில்லை, பின்பு எதோ தோன்றியது போல் சட்டென்று விலகினாள்,

"வேண்டாம் சதீஷ்... இது தப்பு  இதுக்கு தான் நான் அப்பவே போறேன்னு சொன்னேன் "
"தப்பா!!!!  There was a lot of Love in that Kiss இதுல என்ன தப்பு இருக்கு"
"இது தான் தப்பு " என சொல்லி தான் கையில் இருந்த மோதிரத்தை காட்டினாள், ஆட்டோவில் நான் பார்த்து மயங்கிய அதே மோதிரம் 
"எனக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் engagement ஆச்சு, அடுத்த வாரம் கல்யாணம், அதுக்கு Invite பண்ண தான் உன்னை இன்னக்கி கூப்பிட்டேன், ஆனா நீ காபி டேல ரொம்ப Upset ஆயிருந்த, அந்த நிலைமையில உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னு புரியல, சரி கொஞ்ச நேரம் பேசினா நீ நார்மல் ஆகிடுவேன்னு தெரியும், ஆனா அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு" என சொல்லி கைபையில் இருந்து அழைப்பித்தழை எடுத்தாள்.

அமிழ்தத்தையும் விஷத்தையும் அடுத்தடுத்து குடிப்பது போல் இருந்தது " என்ன சொல்ற, இப்போ நீ என்ன Kiss பண்ணினது, நான் உன் வாழ்கையில ..... இது எல்லாமே முடிஞ்சுருச்சா ..." என்னால் பேச முடியவில்லை கண்ணில் நீர் நிரம்பியது 

"அப்படி மட்டும் நெனைக்காத, நீ என்னை பத்தி எப்படி நெனைசியோ அதே மாதிரி தான் நானும், அன்னிக்கி CampFire ஏன் என்னக்கு அவ்வளோ கோபம் வந்துச்சுன்னு புரியல, ஆனா எப்போ காலேஜ் விட்டு வெளிய வந்தேனோ அப்போதான் உன்னைபத்தி முழுசா புருஞ்சுகிட்டேன், அதுக்கு அப்புறம் நான் மீட் பண்ணின ஆம்பிளைங்க யாரும் உன் அளவுக்கு இல்லை, நான் எதாவது தப்பு செஞ்சா அது தப்புன்னு எதைபத்தியும் கவலைபடாம சொல்ற ஒரே ஆள் நீ தான், மத்தவுங்க எல்லாரும் எதாவது பண்ணி என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றாங்க But none of them were true to themselves , நாம மீட் பண்ணி ஒரு மூணு நாலு வருஷம்  இருக்குமா? சத்தியமா இத்தனை வருஷமா உன்னை மாதிரி யாரையும் சந்திச்சதேயில்லை."

என்னால் எதுவும் பேச முடியவில்லை, அவள் தொடர்ந்தாள் " ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவரை மீட் பண்ணினேன் அவர் பேர் ராம் கிட்ட தட்ட உன்ன மாதரியே very open minded ஏன் கவிதை கூட எழுதுவாரு. Arranged Marriage தான், but he is a very nice person. அவரோட என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணிச்சு, வீட்லயும் எனக்கு பிடிச்சுருந்தா சரின்னு சொன்னங்க."

"அப்போ அவ்வோலோதான்னு சொல்றே !!! " என்றேன் தயக்கத்தோடு 
"ப்ளீஸ் சதீஷ் புருஞ்சிகோ... இதுக்கு மேல பேச என்னால முடியாது " என சொல்லி அழைப்பித்தழை நீட்டினாள்

அழைப்பித்தழை வாங்கிக்கொண்டு அவளை விட்டு நடக்க ஆரம்பித்தேன், அப்போது என்னை பார்த்து " சதீஷ், ப்ளீஸ் நடந்ததை மறக்க ட்ரை பண்ணு, என் கல்யாணத்துக்கு வருவல்ல ?"

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை திரும்பி அவளை பார்த்து " அதுக்கு நான் பேசாம செத்துறலாம்" .

எங்கேயாவது நின்று கத்தி அழவேண்டும், அந்த கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து குதிக்கவேண்டும், இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவனை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும், இப்படி பட்ட மன நிலையில் அந்த பூங்காவைவிட்டு வெளியே வந்தேன், வெளியே வருவதற்கு முன் கடைசியாக ஒரு முறை அவளை திரும்பி பார்த்தேன், அவள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை, என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள். இது தான் ஹரிதாவை நான் பார்க்கும் இறுதி முறை.

---- பயணங்கள் முடிவதில்லை

பின்குறிப்பு இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம்.  மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள் . அடுத்த பகுதிகளுக்கான இணைப்புகள் 

பயணம் - பகுதி 1


பகுதி 1  - அன்றொரு நாள்

காலை 7:30 மணி 

ஏனோ தெரியவில்லை அன்று காலை நடந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியே இருந்தது. நான் எப்பொழுதும்  காலையில் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன், ஆனால் அன்றோ மிகவும் தாமதமாகிவிட்டது, எழுந்து பல் தேய்க்க சென்ற போது தான் பேஸ்ட் தீர்ந்துவிட்டதை அறிந்தேன், பின்பு அருகில் இருக்கும் கடையில் சென்று வாங்கி வருவதற்குள் இன்னும் நேரம் விரயமானது.

இவ்வாறு நடந்த எல்லா நிகழ்வுகளாலும் வழக்கமாக 6:45 கல்லூரிக்கு கிளம்பிவிடும் நான் 7:15 ஆகியும் இன்னும் வீட்டைவிட்டு கிளம்பாமல் இருந்தேன். இறுதியாக வீட்டைவிட்டு வெளியே வரும்போது செல்போன் எடுக்க மறந்து விட்டது ஞாபகம் வந்தது, வீட்டிற்குள் வந்து பார்த்தால் அதில் சுத்தமாக சார்ஜ் இல்லை.  சரி ஆனது ஆகட்டும் இத ஒரு அஞ்சு நிமிஷம் சார்ஜ் பண்ணிட்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டே அதை சார்ஜில் போட்டு விட்டு செய்தித்தாளை புரட்டினேன். செய்தித்தாளை  பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை, 7:25 க்கு வீட்டில் இருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன் .

"பட்ட காலிலே படும்" என்ற பழமொழிக்கு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது வழக்கமாக வரும் பஸ் கூட அன்று வரவில்லை. நானோ அந்த பஸ்ஐ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயில் பிடித்து காலேஜ் செல்ல வேண்டும்.  இன்னைக்கு காலேஜ் போன மாதிரிதான் என்று எண்ணிக்கொண்டு இருந்த போது தான் ஏனோ என்னை அறியாமலே அந்த வழியாக வந்த ஆட்டோவை பார்த்து கை போட்டேன். எவ்வளவு தான் லேட் ஆனாலும் அட்ன்டென்ஸ் கூட போனாலும் பஸ்சில் மட்டுமே செல்லும் நான் அன்று எதோ ஒரு அவசரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டேன். ஆட்டோ என்னை நோக்கி வரும் போது ஆடோவின் டிரைவர் பக்கத்தில் ஒருவர் உட்காந்திருப்பதும் பின்னால் யாரோ ஒருவர் மட்டும் உட்காந்திருப்பது தெரிந்தது. ஆட்டோ என் அருகில் வந்து நின்றவுடன் டிரைவரை நோக்கி குனிந்து "ரயில்வே ஸ்டேஷன்"  என்றேன், அதற்கு அவனோ "வா தம்பி பத்து ரூபா" என்றான். ஆட்டோவில் சென்று உட்கார செல்லும் பொது பின்னால் ஏற்கனேவே இருக்கும் இரு விழிகள் என்னை பார்த்து லேசாக விரிந்தது, என் விழிகளோ அவளை பார்த்து அகல விரிந்தது.


என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, காரணம் ஆட்டோவில் உட்காந்திருப்பது ஹரிதா என்னுடன் காலேஜில், ஒரே வகுப்பில் படிப்பவள். ஹரிதாவை பற்றி சொல்ல வேண்டுமானால் காலேஜ் சேர்த்த நாள்லில் இருந்தே அவள் என்னை மிகவும் கவர்ந்திருந்தாள். வகுப்பில் யாராவது ஜோக் சொன்னால் எல்லாரும் சிரிக்கும் போது நானும் சிரித்திக்கொண்டே அவளை பார்பேன், அது மட்டுமல்லாமல் அவள் தினமும் தலையில் அணியும் பூவில் இருந்து, ஏன் சில சமயம் காலில் போட்டிருக்கும் செருப்பு வரை கூட நோட் செய்ததுண்டு. சில நாட்கள் வகுப்பில்  அவளும் என்னை பார்ப்பது போல் ஒரு எண்ணம் தோன்றும், நான் சட்டென்று திரும்பி பார்பதற்குள் அவள் வேறு எங்கோ திரும்பி விடுவாள்.  இந்த பெண்களுக்கு மட்டும் எப்படி இந்த திறமை என்று நான் யோசித்ததுண்டு. என்னை போல் பலருக்கு ஹரிதா மேல் ஒரு கண் இருந்தது.

இதையெல்லாம் நினைத்துக்கொண்டே ஒரு வித உற்சாகத்துடன் ஆட்டோவில் ஏறினேன். ஆனால் ஆட்டோவில் பின் சீட்டில் மூன்று பேர் அமரலாம் ஆனால் நானும் அவளும் மட்டுமே இருந்ததால் நான் ஒரு மூலையிலும் அவள் ஒரு மூலையிலும் உட்காந்திருந்தோம். இன்னும் ஒரு ஆள் ஆட்டோவில் ஏறினால் நாள் நடுவில் முக்கியமாக அவள் அருகில் சென்று விடுவேன்.

ஆனால் அடுத்து ஏறுவது ஒரு பெண்ணாக இருந்தால், அவ்வளவுதான் என் கனவு நாசமாய் போய் விடும். நான் இதே ஓரத்தில் உட்கார புதிதாய் ஏறுபவர் நடுவில் உட்கார வேண்டும். இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, என் கனவில் மண்ணை வாரி போடுவது ஒரு பெண் ஆடோவை நிறுத்தினாள். என் விதியை நொந்துகொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கி வழி விட தயாரானேன். அந்த பெண் அருகில் ஆட்டோ வந்து நின்னதும், "தி நகர்" என்றாள் அதற்கு ஆட்டோ டிரைவர் " ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தான் போறேன் " என்று சொல்லி என் கனவிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இவ்வளவு நடக்கும் போது ஒரு தடவை கூட ஹரிதாவை நான் பார்க்கவில்லை. வகுப்பில் ஒரு தூரத்தில் இருந்து தைரியமாக அவளை பார்த்ததுண்டு ஆனால் இவ்வளவு அருகில் இருக்கும் போது ஏனோ நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லை. அப்போது ஆட்டோவின் முன்னால் இருக்கும் review mirroril அவள் முகம் பளிச்சென்று தெரிந்த்து. "ஆகா இது போதுமே" என்று நினைத்துக்கொண்டு அவளை அந்த கண்ணாடியிலே பார்த்துக்கொண்டே வந்தேன்.

சிறுது நேரம் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்த கண்ணாடியை பார்த்த போது அவள் நேருக்கு நேர் அந்த கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடம் நான் யோசித்தேன், "நாம அந்த கண்ணாடியில பார்த்த அவ முகம் தெரிந்தது அப்படினா அவ பார்த்த நம்ம முகம் தெரியும்"... "ச்சே நம்மல்லாம் ஒரு பொண்ணு பாக்குமா, தலை வாரும் போது கண்ணாடியில முகத்த பார்க்கல!!!!"  என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போதே ஆட்டோ இன்னொருவரை ஏற்ற தயாரானது.

என்றைக்குமே எனக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இன்று கிடைத்தது. ஆம் அந்த ஆட்டோவில் அடுத்து ஏறியது ஒரு ஐம்பது வயது தாத்தா, என் கனவை நினைவாக்கினார்

நான் பள்ளியில் படித்ததில் இருந்தே பெண்களிடம் அவ்வளவாக பேசியது கிடையாது , ஏன் ஹலோ சொல்லி கை கூட கொடுத்தது கிடையாது, இப்படி இருக்க முதல் முறையாக ஒரு பெண்ணிடம் அதுவும் எனக்கு பிடித்தவள் அருகில் அமரும் பொது எனக்கு லேசாக வியர்த்தே விட்டது :) .


அவள் அருகில் அமரும் போது அவள் கை என் மீது லேசாக பட்டது , ஏனோ அவள் தேகம் சற்று சூடாக இருபது போல் இருந்தது. "இவளுக்கு என்ன ஜொரமா இல்ல இந்த பொண்ணுங்க உடம்பே சூடா இருக்குமா ? முன்ன பின்ன தொட்டிருந்தா தெரியும் !!!" என்ற குழப்பத்துடன் உட்கார்ந்தேன். ஆடோவின் அந்த மூலையில் இருந்த போதே அவள் முகத்தை நேராக பார்க்க தைரியம் இல்லாத நான், அவள் அருகில் அமர்ந்த போது அவள் பக்கம் கூட என்னால் பார்க்க முடியவில்லை.

சற்று தலை குனிந்தவாறு அவள் சுடிதாரை பார்த்தேன் ,,, அழகான வண்ணத்துபூச்சிகள், தசாவதாரம் படத்தில் கமல் சொன்ன butterfly effect  இப்போது தான் எனக்கு புரிந்தது. காலையிலிருந்து  நான் தாமதமாக கிளம்ப நடந்த எல்லா சம்பவங்களும் இவளை பார்பதற்கு தானோ ? என்று எண்ணினேன்.

"என் வாழ்வில் வந்த Butterfly Effect இந்த butterfly `i பார்க்க தானோ ? " 
என்னை அறியாமல் கவிதை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

நான் வசிக்கும் பகுதியின் சாலைகள் பற்றி சொல்லியே தீர வேண்டும் , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அங்கு சாலை என ஒன்று இருந்ததே இல்லை. எத்தனையோ நாட்கள் இந்த சாலையையும் அரசாங்கத்தையும் திட்டி தீர்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆட்டோ ஒவ்வொரு பள்ளத்தில் இறங்கும்போது அவள் என் மீது லேசாக சாய, அவள் தலைமுடி என் மீது பட, அடடா இந்த ரோடை போடாமல் இருந்த அரசாங்கத்தை கோயில் கட்டி கும்பிட வேண்டும் என தோன்றியது.


இப்படி கரடு முரடான பாதையில் போய் கொண்டிருக்கும்போது அவள் செல்போன் சிணுங்க, அவள் அதை எடுத்து " ஹலோ நான் வந்துகிட்டே இருக்கேன் " என்றாள், எனக்கு மனதில் ஒரு சிறு சந்தேகம் ஒரு வேளை இவளுக்கு boy friend  யாராவது இருப்பானோ ? . என்ற நினைத்து கொண்டு செல்போனில் பேசும் அவளை பார்த்தேன். கண்டிப்பாக இல்லை , ஏனென்றால் Boy Friend உடன் பேசும் பெண்களை நான் பார்த்ததுண்டு, எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சி அந்த பெண்களிடம் இருக்கும்.  இவளோ சர்வ சாதரணமாக பேசும் போதே அது கண்டிப்பாக Boy friend இல்லை என நினைத்துக்கொண்டே கடவுளக்கு நன்றி சொன்னேன்.

ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டது. ஆம் வாழ்வில் நான் ஆனந்தமாய் இருந்த சில நிமிடங்கள் முடிந்து விட்டது. ஆடோவிலிருந்து இறங்கி என் கையில் இருந்த இருபது ரூபாய்  நோட்டை கொடுத்தேன். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் அவள் நீட்டிய பத்து ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்.

அந்த நோட்டை வாங்கிய போது என் மனதில் ஒரு குரல் ஒலித்தது

"மாறியது பணம் மட்டுமல்ல என் மனமும் தான்"

இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தோம் இப்போ ஏதேதோ சொல்லுரேனே , என நினைத்துக்கொண்டு நான் நடந்த போது , பின்னால் இருந்து ஒரு குரல் "சதீஷ் ... ஏய் சதீஷ்"  ஹரிதாவின் குரல், என்னை தான கூப்பிடுகிறாள். நான் திரும்பிய போது அவள் கையில் வைத்திருக்கும் புத்தகங்கள் கீழே விழ அவளை நோக்கி  நான்  நடக்க ஆரம்பித்தேன், என் நடை ஓட்டமாக மாறியது.                                                                                                                             
என் ஓட்டம் அவள் அருகில் நின்ற போது கீழே கிடந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டிருந்தாள் , நானும் குனிந்து புத்தகத்தை எடுக்கலாம் என்று நினைபதற்குள் எல்லா புத்தகத்தையும் எடுத்துவிட்டாள்.

லேசாக கூந்தலை கை விரலால் கோதியபடி என்னை பார்த்து " சதீஷ் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு முடியுமா ?" . அவள் சொல்லிய எந்த வார்த்தையும் என் காதில் விழவில்லை அவள் தலை முடியை தன கை விரலால் கோதிய காட்சியை என் மனது ரசித்துகொண்டிருந்தது.
"சதீஷ் நான் உன்கிட்ட தான் பேசுறேன்" என்று சொன்னாள்.

"ஹ்ம்ம் சொல்லுங்க " என்றேன்.

"வழக்கமா அம்மா கிட்டே தான் பாக்கெட் மணி வாங்குவேன். இன்னைக்கி வாங்கி பர்ஸ்ல வச்சேன். ஆனா பார்ச வீட்டுல மறந்து வச்சுட்டேன். பைல வச்சுருந்த காச ஆட்டோக்கு கொடுத்திட்டேன். என்னோட ட்ரைன் பாஸ் வேற போன வாரமே முடிஞ்சுருச்சு. Please எனக்கு  என்னக்கி மட்டும் ட்ரைன் டிக்கெட் எடுத்து தர முடியுமா. நான் நாளைக்கு கண்டிப்பா திருப்பி தந்திறேன்"


"No Problem ! வாங்க நானே டிக்கெட் வங்கி தரேன்" என்றேன்.

அதிர்ஷ்ட தேவதை என்பதின் அர்த்தம் இன்று தான் எனக்கு புரிந்தது, எந்த பெண்ணை நான் இவ்வளவு நாள் ரசித்தேனோ அவள் கூட பேசும் ஒரு வாயப்பு இன்று கிடைத்ததை நினைத்துக்கொண்டே என் பர்சை பார்த்தேன். அதில் ஹரிதாவின் பத்து ருபாய் நோட்டு , ஒரு நூறு ருபாய் நோட்டு இருந்தது. ஹரிதாவின் கைபட்ட அந்த நோட்டை எனக்கு தர விருப்பமில்லை அதனால் டிக்கெட் வாங்குவதற்கு நூறு ருபாய் நோட்டை வெளியே எடுத்தேன்.


நூறு ருபாய் நோட்டை பார்த்த ஹரிதா. "சதீஷ் இந்த டிக்கெட் கவுன்ட்டர்ல இருக்கிற ஆளு நூறு ருபாய் நோட்டை பாத்தா கண்ணா பின்னானு கத்துவான். போய் சில்லறை கொண்டுவானு டிக்கெட்டே தர மாட்டான்."


"என்னை பாத்தா சொல்ல மாட்டான் " என்றேன்


"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல போன வாரம் அவன் கிட்டே செமத்திய நான் வாங்கி கடிகிட்டேன். போன வாரம் அவனால ட்ரைன மிஸ் பண்ணிட்டேன்".

"நீ வேணும்னா பாரு என்னை ஒன்னும் சொல்ல மாட்டான்" இன்று சொல்லிய படி டிக்கெட் கவுன்டரில் நூறு ருபாய்  நீட்டினேன்.

உள்ளே ஒரு ஐம்பது வயசான ஒரு ஆள் தலை முடியெல்லாம் முழுவதும் நரைத்துப்போய், கௌண்டமணி ஸ்டைல்ல சொல்லனும்னா

"உள்ள ஒரு சோன்பப்புடி தலையன் உட்காந்திருந்தான்".

நான் கொடுத்த நூறு ருபாய் நோட்டை பார்த்தான் அப்புறம் என்னை பார்த்தான், எதுவுமே பேசாமல் டிக்கெட் கொடுத்தான் கூடவே மிச்ச சில்லரையும் கொடுத்தான்.


ஹரிதா ஆச்சரியத்துடன் என்னை பார்த்தாள் "எப்படி அந்த ஆள் ஒரு வார்த்தை கூட பேசல " என்றாள்.

"அதெல்லாம் அப்படித்தான்" என்று கூறி டிக்கெட் மற்றும் மிச்ச சில்லறையை அவளிடம் கொடுத்தேன்.

"ஏய் டிக்கெட் மட்டும் போதும், காசு வேணாம்" என்றாள் தயக்கத்துடன்.

"கைல சுத்தமா காசு இல்லன்னு சொன்ன, மத்தியானம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே திருப்பி சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது, அது மட்டுமில்ல இந்த மாதிரி சில்லறை என் கைல இருந்த சீக்கிரம் காலி ஆயிடும். நாளைக்கி நீ திருப்பி தரும் போது நூறு ரூபாயா கொடு"

சரி என்று தலை ஆட்டியபடி டிக்கெட் மட்டும் சில்லறையை என் கையில் இருந்து வாங்கினாள். இருவரும் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

"கேட்கவே மறந்துட்டேன், அந்த ஆள் எப்படி உன்ன திட்டமா டிக்கெட் கொடுத்தான். நான் அவன்  பல பேர திட்டி பார்த்திருக்கேன் உன்ன மட்டும் ஏன் திட்டல?"


"என்ன திட்டாதது தான்  பிரச்சனையா, அது ஒரு சின்ன கதை ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நடந்துது" என்று கூறும் போது ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வந்துவிட்டோம்.

"லேடீஸ் கோச் அந்த பக்கம் வரும்னு நெனைக்கிறேன்" என்றேன்.

"ஏற்கனேவே லேட் ஆயிடுச்சி லேடீஸ் கோச்ல நம்ம கிளாஸ் கேர்ள்ஸ் யாருமே இருக்க மாட்டாங்க, போர் அடிக்கும்!! நான் உன் கூடவே வரேன். நீ மொதல்ல உன்ன ஏன் அந்த ஆள் திட்டலேன்னு சொல்லு"


நான் லேசாக சிரித்தேன் சற்று எட்டி சிக்னலை பார்த்தேன் அது சிகப்பில் இருந்து பச்சைக்கு மாறியது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் அவளுக்கு இப்படி ஒரு ஆர்வத்தை தூண்டும் என்று நான் எதிர்பார்கவில்லை ,


"சரி சொல்றேன், போன வாரம் அதே டிக்கெட் கவுன்ட்டர்ல 100 ருபாய் கொடுத்து டிக்கெட் கேட்டா போய் சில்லறை கொண்டுவானு தொறதிட்டான், அவனால ட்ரைன மிஸ் பண்ணி,...  நீ கூட பார்த்திருப்ப போன வாரம் maths கிளாஸ்ல லேட்டா வந்து... செம்ம திட்டு வாங்கினேனே, அப்போ முடிவு பண்ணினேன் இவன ஒரு வழி பண்ணனும்னு , அடுத்த நாள் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மளிகை கடைக்கு போய் ஒரு 40 ரூபாய்க்கு 50 பைசா காயின் வாங்கி வச்சிகிட்டேன்"


இப்படி சொல்லி கொண்டிருக்கும்போது ட்ரைன் வந்துவிட்டது , நாங்கள் இருவரும் ஒரே கோச்சில் ஏறினோம். உள்ளே செல்லும்போது நான் கடவுளிடம் இன்னொரு வரம் வேண்டினேன் " தெய்வமே இந்த கோச்ல நம்ம காலேஜ்ல முக்கியமா நம்ம பசங்க யாருமே இருக்க கூடாது", நான் அவளுடன் வருவதை பார்த்தா என் கதை கந்தல். கடவுளக்கு அன்னைக்கு நல்ல மூட் என் வரம் உண்மையானது.

உள்ளே எங்கள் இருவருக்காக இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க மறுபடியும் அவள் அருகில் என் பயணத்தை தொடர்ந்தேன்.


அன்று லேசாக மழை தூற ஆரம்பித்தது , அவள் ஜன்னல் வழியாக லேசாக எட்டி பார்த்தாள் , வாடை காற்று அவள் கூந்தலை சிறகடிக்க , மழை தூறல் அவள் நெற்றியில் நடணம் ஆட , மீண்டும் என் மணதில் ஓர் குரல்


"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் காற்றாக மாறி உன் கூந்தலில் ஒரு கூகள் search செய்திருப்பேன்"
என்ன சர்ச் என்கிறாயா 
என் மணதின் குரல் அடங்குவதற்குள் என் மணதை கொய்தவளின் குரல்
"சரி.... அப்புறம்  என்ன ஆச்சு மளிகை கடைக்கு போய் சில்லறை வாங்கினே ...."

"ஓ அதுவா , அடுத்த நாள் அதே கவுன்ட்டர்ல நூறு ருபாய் நீட்டினேன் போய் சில்லறை கொண்டுவான்னு சொன்னான், உடனே 20 ரூபாய்க்கு 50 பைசா 25 பைசா காச ஒரு துணி பொட்டலமா கொடுத்தேன், என்னது இதுனு கேட்டான் , நீங்க தானே சில்லறை கேட்டீங்க அப்படின்னு சொன்னேன் , 20 ரூபாய்க்கு சில்லறை யோசிச்சு பாரு கிட்ட தட்ட ஒரு நாற்பது ஐம்பது காயின் இருக்கும்... அதே எண்ணி முடிக்கேவே அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு... கவுன்ட்டர்ல கூட்டம் சேர, எல்லாரும் அவன திட்ட ஆரம்பிச்சிட்டாங்க , அதனால என்ன கண்டா அவனுக்கு ஒரு பயம், ஏதோ ஒரு நாள் சில்லறை இல்லேன்னு சொன்னா சரி , தினமும் இத ஒரு பொழப்பா வச்சிருந்தா கோபம் வராது "


நான் இதை சொல்லி முடிக்க அவள் விழுந்து விழுந்து சிரித்தாள், என் வாழ்வில் இது வரை வராத குழப்பம் அப்போது வந்தது , அவள் சிரிக்கும் போது நெற்றியில் வந்து விழும் கூந்தலை பார்பதா, அவள் தலை அசையும் போது லேசாக அசையும் கம்மலை பார்பதா, 


"உன்னை நான் வேற மாதிரி நினைச்சேன் ... பெரிய ஆளு டா நீ ", என்றாள் லேசாக கூந்தலை கோதியபடி
"வேற மாதிரினா?" 
"உன்ன டக்குனு யாராவது பார்த்தாங்கனா , பரட்டை தலை , கண்ணாடி , புல் ஹான்ட் சட்டை, எப்போவுமே அமைதியா "
"என்ன லூசுன்னு நெனச்சியா "
"இல்ல லூசு வேற மாதிரி இருக்கும், உன்னை ஒரு பழம்னு நினைச்சேன் !!!"

எனக்கு தூக்கி வாரி போட்டது இப்படி ஒரு இமேஜ்யா நா maintain பண்ணிக்கிட்டு இருக்கேன். அமைதியா இருந்த பழம், ஓவரா பேசுனா செம்ம சீனு  ...  இந்த பொண்ணுங்க எப்படி நம்மல define பண்ணுராங்கேனே புரியலேயே 


அவளுக்கு ஒரு கவுன்ட்டர் கொடுக்க வேண்டும் என நினைத்த படியே 
"நா கூட தான் உன்னை என்னமோன்னு நினைச்சேன் .. நீ வேறே மாதிரி இருக்கே " என்று ஒரு அவசரத்தில் சொல்லிவிட்டேன்.
"அப்படி என்ன நீ நினைச்சே " என்றாள் ஒரு சின்ன எதிர்பார்போடு 

அடடா உளறிட்டேனே இப்போ என்ன பண்ணுறது?,என நினைத்துக்கொண்டிருக்கும்போது ரயில் ஒரு ஸ்டேஷன்இல் நின்றது. சரி பேச்ச மாத்த வேண்டியது தான் என் முடிவு செய்து 
"இது என்ன ஸ்டேஷன் " என்றேன்
"ஹ்ம்ம் ரேடியோ ஸ்டேஷன் , கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்ன பத்தி என்ன நினைச்சே?"

"எப்படி திரும்பினாலும் கேட் போடுறாளே," என மனதில் நினைத்த படி,  உன்னை தான் எப்போவுமே நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொல்லலாம்னு almost முடிவு செய்துவிட்டேன் , அப்போது 
தான் தோணிச்சு வாழ்க்கையிலே இப்போ தான் ஒரு பொண்ணு நம்ம கூட ஒழுங்கா பேசுது, இத கெடுக்கணுமா, "டேய் சதிஷ் உடனே ஒரு கதையே ரெடி பண்ணு டா"

"அதாவது" என ஆரம்பித்தேன் அடுத்து என்ன சொல்றதுனே தெரியாமல் , " நீ தப்பா எடுதுக்கலனா " என்று இழுத்தேன் 
"தப்பாவா நீ மொதல்லா என்ன விஷயம்னு சொல்லு ". 
கிட்டத்தட்ட இப்படி ஒரு பதிலை தான் நான் எதிர்பார்த்தேன், அதனால அவ அந்த பதில சொல்லும்போதே அடுத்து என்ன சொல்றதுன்னு முடிவு செஞ்சேன் 


"ஓகே நா கொஞ்ச opena பேசுவேன் அதனாலே என்கிட்ட பொண்ணுங்க அதிகமா பேச மாட்டாங்க. அதனால தான் நீ தப்பா எடுத்துக்க கூடாதுன்னு சொன்னேன் , சொன்னாலும் சொல்லலேனாலும் you are one of the good looking girls in our class, நான் இதுவரை உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க சில பேர பார்த்திருக்கேன் , அவுங்க எல்லாருக்கும் அழகு அவங்க மண்டையில ஏறி இருந்துச்சி, என்ன மாதிரி பசங்கள பிச்சக்காரன் மாதிரி பார்ப்பாங்க , அதனாலேயே அந்த மாதிரி பொண்ணுங்கள கண்டாலே நான் கொஞ்சம் தள்ளி நிப்பேன் . ஆனா நீ கொஞ்சம் different , அந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட இருக்கிற அந்த artificial tendency உன் கிட்ட இல்ல , எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பேசுற , சொல்லபோனா எப்போ என் கூட ட்ரைன்ல எந்த விதமான தயக்கமும் இல்லாம பேசுற , சிரிக்கிற , அதனால தான் சொன்னேன் உன்ன பத்தி நான் வேற மாதிரி ..." 

நான் சொல்லி முடித்தவுடன் அவள் சில வினாடிகள் எதுவும் சொல்லவில்லை, அந்த மௌனம் என்னக்குள் ஒரு சூறாவளியை உண்டாக்கியது 

"எவன் ஒருவனாலும் கேட்க முடியாத சத்தம் 
 ஒரு பெண்ணின் மௌனம் "

சில வினாடிகள் தொடர்ந்த அந்த மௌனம் என் மனதை  இன்னும் பதம் பார்த்தது, சிறிது நேரம் கழித்து அவள் " ஹ்ம்ம் " என்றாள், நான் ஆவலோடு அவளை நோக்கினேன்
"நீ சொல்றது கூட கரெக்ட் தான், நான் கூட சில பொண்ணுங்கள பார்த்திருக்கேன் , ஏன் நம்ம பக்கத்துக்கு கிளாஸ்ல சில பேர் இருக்காங்க , அவுங்க பண்ற அட்டுழ்யம் தாங்கல , பசங்கள விடு சில பொண்ணுங்களையே மதிக்கமாட்டங்க, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் அப்படி இல்ல, இப்போ நான் ஒரு விஷயம் சொல்லுவேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது , சொல்லவா ?"

"என்னடா ஏன் டயலாக் என்னக்கே திரும்பி வருது" , என நினைத்த படியே " பரவாயில்லை சொல்லு" என்றேன் 

"நீ சில விஷயத்துல ரொம்ப தயங்குற , அந்த பழக்கத்தை விட்டுரு, அன்னைக்கி Physics கிளாஸ்ல சார் நிறைய கஷ்டமான கேள்விஎல்லாம் கேட்டாரு , நம்ம கிளாஸ்ல இருக்குற எல்லாரும் ஏதேதோ தப்பு தப்பா பதில் சொன்னாங்க, நீ மட்டும் கரெக்ட் answera  உன் பக்கத்துல இருகிறவன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தே , ஏன் தைரியமா கிளாஸ்ல சொல்லலே. தப்போ சரியோ எழுந்து சொல்ல வேண்டியது தானே ?"

அவள் சொன்ன விஷயம் சரி தான் எனக்குள் இருக்கும் அந்த inferiority Complex பத்தி தான் , அவள் சொன்ன போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோசம் , கிளாஸ்ஸில் நான் மட்டும் தான் அவளை நோட் செய்கிறேன் என இன்று வரை நான் நினைத்தேன் , ஆனால் அவளும் நான் செய்யும் சில விஷயங்களை பார்த்திருக்கிறாள் என நினைக்கும் போது ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.

"ஹ்ம்ம் புரியுது , என்ன செய்ய பழகிடுச்சு , கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்து உட்கார்ந்து, பதில் சொன்னா பசங்க வேற ஓட்டுவாங்க"


"அதை பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற", என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போது ரயில் தண்டவாளம் மாறியது , அந்த நேரத்தில் ஏற்பட்ட அந்த ஒரு குலுக்களில் என் பை கிழே விழுந்தது


நான் உடனே கீழே விழுந்த என் பையை எடுத்து உள்ளே நான் வைத்திருந்த தண்ணிர் பாட்டில் ஒழுகி விட்டதா என பார்க்க பையை திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தேன், அப்போது எடுக்க கூடாத ஒரு புத்தகத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டேன்.

அது ஒன்னும் கில்மா புத்தகம் அல்ல நான் ரொம்ப வருஷமாக என மனதின் குரல்களை பதிவு செய்த புத்தகம், ஹரிதா பற்றிய சில வரிகளும் அதில் அடக்கம்.

என் போறாத காலம் இருந்த சில புத்தகத்தில் சரியாக அவள் அந்த புத்தகத்தை எடுத்தாள், அவள் அந்த புத்தகத்தை படித்துவிட்டால் என்ற திகிலுடன் நான் பேசுவதற்குள் 
அவள் " இது என்ன நோட்புக் ரொம்ப பழசா இருக்கு ", 
"ப்ளீஸ் அதை மட்டும் படிக்காத " என்றேன் 
"ஏன்!!!! இது என்ன டைரியா பார்த்தா டைரி மாதிரி தெரியலே" 
"டைரி இல்ல ஆனா டைரி மாதிரி அது ஒரு கதை அப்புறம் சொல்றேன் " என்றேன் பதட்டத்தோடு 
"கதையா என்ன கதை லவ் ஸ்டோரியா ... டேய் சொல்லேவே இல்ல " என்றாள் ஒரு சிரிப்போடு 

"ஐயோ லவ் ஸ்டோரி எல்லாம் கிடையாது அது வேற மாதிரி" 
"வேற மாதிரினா? டேய் இது என்ன பாய்ஸ் படத்துல்ல ஒருத்தன் ஒரு மாதிரி கதை எழுதுவானே , அதுவா?" , அவள் கிண்டல் தொடர்ந்தது , அவளுக்கு ஏன் அவஸ்தை பிடித்து விட்டது , பெண்களுக்கு பிடித்த விஷயமே ஆண்களை அவஸ்தை பட வைப்பது தானே 

"ச்சே அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல , சரி சொல்றேன் அது நான் ரொம்ப நாளா எழுதுற கவிதை புக் , சொல்ல போனா ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டு இருக்கேன், அது கிட்ட தட்ட என் டைரி மாதிரி "

"கவிதைலாம் எழுதிவியா ,,, முகத்துல தாடியெல்லாம் காணோம் , சரி ஓகே நான் படிக்கல , ஹ்ம்ம் ஆனா இந்த நோட்புக் நான் தர மாட்டேன்" , அவள் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள்,  " சரி கவிதை எழுதுவேன்னு சொன்னே, இப்போ எனக்கு instant கவிதை சொல்லு பார்போம் "

"என்ன காபி மாதிரி கவிதை கேக்குற , எப்படி சொல்றது"
"நீ சொல்லிட்டா இதை இப்போவே திருப்பி தரேன்" 

"டேய் மனசாட்சி!!! தேவை இல்லாத நேரத்துல்ல எல்லாம் TR மாதிரி ஏதேதோ சொல்லுவியே இப்போ எங்கடா போன" என் மனதின் குரலை முதல் முறையாக நானே அழைத்தேன், அவனும் சம்மதித்தான் 

அவசரமாக போட்ட காபி போல், டிசைன் பண்ணாமல் அடித்த coding போல், ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 
"சென்னை 28யில் சிவா சொல்வது போல் ஒரு மொக்கை கவிதை சொன்னேன்... "


சொல்லி முடித்தவுடன் நான் அவளின் பதிலுக்காக காத்திருக்க ரயிலில் இருந்த சில பயணிகள் என்னை பைத்தியக்காரனை பார்ப்பதை போல் பார்த்தார்கள், சிறிய மௌனத்திற்கு பிறகு 
"ஹ்ம்ம் ஏதோ சுமாரா இருக்கு" என்றாள்
"சுமாரா இருக்கா ..." என்றேன் தயக்கத்துடன் 
"ஹேய் சும்மா தான் சொன்னேன் டக்குனு கவிதை கேட்டவுடனே ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆவேன்னு நினைச்சேன், ஆனா உடனே சொல்லிட்ட, நிறைய எழுதிவியா " 
அப்போது தான் கமல் ஆளவந்தான் படத்தில் சொன்ன வசனம் நினைவுக்கு வந்தது 
"எழுத தேவையில்லை சொன்னாலே வரும் " என்றேன் 

நான் இந்த வசனத்தை சொல்லி முடிக்கவும் நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதும் சரியாக இருந்தது 
"இந்தா உன்னோடைய டைரி , ஆனா இதை ஒரு நாள் நீ என்கிட்டே படிச்சு காட்டணும்"
நான் லேசாக சிரித்தேன், அந்த புத்தகத்தை வாங்கி ஸ்டேஷனில் இறங்க தயாரானேன்.

வாழ்கையில் நான் அனுபவித்த சந்தோஷமான நிமிடங்கள் நிறைவுக்கு வந்தது, இருவரும் இரயில் நிலையத்தில் இறங்க அவள் இரயிலை விட்டு இறங்கி சற்று முன்னும் பின்னும் பார்த்தாள்,
"என்ன யாரையாவது தேடறியா ?" என்றேன் 
"இல்ல நம்ம காலேஜ் பொண்ணுங்க யாரும் இருக்காங்களான்னு பார்த்தேன்"
"ஏற்கனவே நம்ம லேட்டு , இனிமே யாரும் வர மாட்டங்க"
"அப்பாடி நல்ல வேளை உன்னோட பார்த்தாங்க அப்புறம் நான் அவ்வளவுதான் , ஓட்டி தள்ளிடுவாங்க"

நான் சற்று பலமாக சிரிக்க ஆரம்பித்தேன் 
"ஏன் இப்படி சிரிக்கிற" என்றாள்
"உனக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்ல நீ ட்ரைன்ன விட்டு இறங்கும்போது இத பத்தி யோசிச்ச நா ட்ரைன்ல ஏறும் போது யோசிச்சேன் , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மத்தவங்கள பத்தி கவலை படாதேன்னு சொன்னே இப்போ நீயே மத்தவங்கள பத்தி யோசிக்கிற "
"ஆமா நீ சொல்றது கரெக்ட் தான் நான் ஏன் மத்தவங்கள பத்தி யோசிக்கணும்"

எங்கள் இருவரின் நட்பை அங்கீகரித்தது அந்த பதில், ஹரிதா உடன் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் , எத்தனையோ நாள் இவ்வழியே கல்லூரி செல்ல வேண்டுமே என்ற கடுப்புடன் நடந்த நான் அன்று முதல் முறையாக ஆனந்தமாய் நடக்க ஆரம்பித்தேன் , ஆட்டோவில் தொடங்கிய அந்த பயணம் என் வாழ்க்கைப் பயணத்தை மாற்றும் என நான் அப்போது நினைக்கவில்லை.

---- பயணங்கள் முடிவதில்லை 


பின்குறிப்பு : இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம்.  மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள் . அடுத்த பகுதிகளுக்கான இணைப்புகள் 




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More