Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

மூன்றாம் உலகம்

பலர் வாழ்வில் தவற விட்ட, தவிக்க விட்ட ஒரு உலகம்.... எனது இரண்டாவது சிறுகதை!!!

Exams, Sleep and Many more.....

A small journey into the unavoidable world of exams and evaluations.....

பயணம் - பகுதி 1

சில பயணங்கள் நம் வாழ்க்கை பயணத்தை முடிவு செய்யும் .... தமிழில் சிறுகதை புனைய நான் மேற்கொண்ட முதல் முயற்சி !!!

WHAT IS GOD!!!

For people who are searching who and where is God, this question might give some answers.....

POSTIVE, NEGATIVE, and NEUTRAL

Is the essence of our lives woven among these three factors? in continuation to post on IS IT A SIN TO BE BAD ?.....

IS IT A SIN TO BE BAD ?

Is doing bad things in life a part of our configuration or is it necessary to have bad things in life .....

IPL - A RAT RACE ?

Is IPL worth the hype it claims being the most competetive tournament or its just a RAT Race .....

சென்னையில் ஒரு விடுமுறைக்காலம்

Dedicated to all Engineers from Chennai who are breaking their heads out in an MNC in Bangalore...

Monday, July 15, 2013

The Magician

Well everybody have given names to Dhoni be it Iceman, Captain Cool… etc. But it was all related to how Dhoni behaved in the field or how his temperament was in close matches, but the real name of MS Dhoni is still hidden… he is the Master Magician…. Let me prove it.

1. The Magicians View
In a magic art there are two views, one the  “Audience View” which the whole world get to see on stage and the other one known as “Magician’s view”, which is visible only to the magician. Dhoni is one of the few captains in world cricket, who gets this view in a place where he usually stands in the cricket field, right behind the stumps. When the whole word watches a bowler who runs straight into the pitch, the magician stands behind the stumps calculating, the bounce in the track, line of the delivery, field settings and most importantly the batsmen`s weakness which is not visible to anyone in the field. It`s from this position where all the tricks are shown to the world. 

2. Tricks up his sleeve
The art of a magician is to surprise the audience and his potential opponents who are in his business. Dhoni`s tricks are numerous and being the skipper of his team for so many years, Can anyone in the opposition outguess Dhoni`s next move? Let me ask a much simpler question “Can anyone guess the batting order of CSK?” As per IPL2013 even Ashwin can open the innings which even Ashwin would not have thought in the wildest of his dreams.

3. The Prestige
If you have seen Chris Nolan`s “The Prestige” you can understand what I am speaking about, for the ignorant people let me quote from the movie….

“Every great magic trick consists of three parts or acts. The first part is called "The Pledge". The magician shows you something ordinary: a deck of cards, a bird or a man. He shows you this object. The second act is called "The Turn". The magician takes the ordinary something and makes it do something extraordinary. Making something disappear isn't enough; you have to bring it back. That's why every magic trick has a third act, the hardest part, the part we call "The Prestige".

This is one part which Dhoni has mastered. Consider the final matches all the 3 ICC tournaments which Dhoni has captained.

1.   The Pledge 
In all the 3 matches “The Pledge” that was shown to the fans was the trophy, by getting into the finals Dhoni had already shown “The Pledge” to the audience.

2. The Turn
In midway of all these 3 matches, India was in a condition where the Pledge i.e. the Trophy has disappeared and India was in verge of losing those matches (Misbah`s innings in WT20, India losing crucial middle order wickets in WC2011 and Bopara`s innings in CT13)

3. The Prestige
In this hardest part Dhoni not only surprised the audience but even the opponents. Joginder Sharma in WT20, his own innings coming ahead of Yuvi in WC2011, Ishant Sharma in CT13 are some of his Prestige acts which brought back the trophy which had disappeared in the midway.  


4. Rabbit out of the Hat
You cannot be a magician unless you can pull the rabbit out of the hat. Dhoni has done this time and again in lot of matches. Do you think getting wickets out of Joginder Sharma and Ishant Sharma is normal!!! 

All that the world observes from Dhoni is his calmness, cool character but seldom do they know that these are all decoys. The magic happens elsewhere, you won't find it because, you're not really looking. You don't really want to work it out. You want to be fooled by Magician Dhoni.



Sunday, February 3, 2013

IRCTCயும்...Lower பெர்த்தும்


“டேய் பத்தரை மணி ஆகுது!!! இன்னும் குளிக்கக்கூட இல்லை, எப்போ குளிச்சு எப்போ சாப்பிடுவ ?” அம்மாவின் அதட்டல்.

அந்த அதட்டலுக்குள் இருந்த அன்பு இந்த IRCTCக்கு எப்படி புரியும்

“இரும்மா இந்த தட்கால் டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன், இப்போ விட்டா அப்புறம் கிடைக்காது, ஏற்கனவே முக்கால் வாசி டிக்கெட் காலி ஒரு அம்பது டிக்கெட் தான் மிச்சம், எப்படியாவது புக் பண்ணனும்ன்னு பார்த்தா முடிய மாட்டேங்குது”

நீங்கள் இந்தியாவில் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் ஒரு சராசரி குடிமகன் என்றால் இந்த IRCTCயிடம் கண்டிப்பாக ஒரு முறையாவது மாட்டியிருக்க வேண்டும், காதலில் மாட்டுவது போல...


காதலுக்கும் இந்த ரயிலுக்கும் தான் எத்தனை ஒற்றுமை
இரு தண்டவாளங்கலான ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் காதல் என்ற ரயில், தண்டவாளங்கள் சேர்ந்தாலும், பிரிந்தாலும் ரயில் சென்று சென்றுகொண்டே இருக்கும், அது போல் காதலர்கள் இணைந்தாலும், பிரிந்தாலும் அந்தக் காதல் என்றும் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும்.

இப்போது ஏன் காதலை பற்றி பேசுகிறேன் என்றால் நான் IRCTCயில் இருக்கும் இடம் அப்படி, வங்கி பட்டுவாடா முடிந்து டிக்கெட் கிடைகும்மா கிடைக்காதா என்ற நிலைமை. இந்த IRCTC வலைதளத்தை டிசைன் செய்தவன் பல ப்ளாக் அண்ட் வைட் படம் பாத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த காலத்தில் flash back சொல்லும்போது காட்டும் அந்த சுழலை இப்படிப் பயன் படுத்தியிருக்க முடியாது.

“கடந்த காலத்தை சொல்ல பயன்பட்ட ஒரு பொருள் இப்போது வருங்காலத்தை முடிவு செய்கிறது”

முன்பு சொன்னது போல் காதலுக்கும் ரயிலுக்கும் பெரிய வித்தியாசமில்லை இரண்டும் நம்மை பாடாய் படுத்தி இறுதியில் கண்டபடி பிதற்றவைக்கிறது. ஆனால் இந்த IRCTC நம் காதலை விட ஒரு படி மேல், ஒரு பெண்ணிடம் நம் காதலை சொல்லும் போது அவள் முகத்தை வைத்தே நம் வெற்றி தோல்வியை கொஞ்சம் தீர்மாணிக்க முடியும் ஆனால் இந்த வலை தளத்தில்  வங்கி பட்டுவாடா ஆனாலும் டிக்கெட் கிடைப்பதில் வெற்றி தோல்வியை அந்த ஆண்டவனாலும் முடிவு செய்ய முடியாது.

“ஒரு பெண்ணின் மனதை விட ஆழமான விஷயம் இந்த IRCTC!!!!!

“என்னடா டிக்கெட் வந்திருச்சா “ அம்மா கேட்க

“டிக்கெட்டா!! வருருரும்....... ஆனா வராது“

“இதுக்குத் தான் அப்போவே சொன்னேன்... பொங்கலுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட் எடுத்து வைன்னு, நீ தான் கேட்கவே இல்லை, நான் கூட தான் ஒரு கல்யாணத்துக்காக நாளைக்கு ஊருக்கு போறேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வைக்கல”

அம்மா சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை, என் காதலியிடம்... மன்னிக்கவும் IRCTCயிடம்.... என் மனதை..... மீண்டும் மன்னிக்கவும் என் பணத்தை ஒப்படைத்திருக்கிறேன்.
ஒரு சில வினாடிகள் கழித்து அவள் சிரித்தாள் “CONFIRM S5/0025/LB”

“அப்பாடா ஒரு வழியா!!!!” என நான் பெருமூச்சு விட
அம்மா அடுப்பங்கறையில் இருந்து கொண்டே “என்னடா கிடைச்சிடுச்சா, முன்னாடியே எடுத்து வச்சா இந்த பிரச்சனை வருமா ?”

நேராக அம்மாவிடம் சென்றேன், “முன்னாடியே எடுத்தா மட்டும் கிடைச்சிடுமா, நீ கூடத்தான் ரெண்டு மாசம் முன்னாடி எடுத்த... வெய்டிங் லிஸ்ட்ல தானே இருக்கு”

“வெய்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது போன வாரமே RAC வந்துருச்சு, சும்மா சோம்பேறித்தனமா டிக்கெட் புக் பண்ணாம காரணம் சொல்லாத, இத்தனைப் பேர் ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்றாங்களே அவுங்கலாம் என்ன பைத்தியமா...”

அதுக்கு நான் பதில் சொல்ல முற்பட அம்மா, “நீ ஒன்னும் சொல்லத்தேவையில்லை, போய் குளிச்சிட்டு வா, தோசை போட்டு வைக்கிறேன், இன்னைக்கி சனிக்கிழமை ஆஞ்சிநேயர் கோயிலுக்கு போயிட்டு வா...”

இதற்கு மேல் பேசினால் சண்டையில் தான் போய் முடியும், அம்மா சொன்னதை செய்யக் கிளம்பினேன்.    

ஒவ்வொரு முறையும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து நான் கழித்த வாரஇறுதி நாட்களுக்கும் இந்த முறையும் பெரிய வித்தியாசமில்லை, ஒரு நாள் வீட்டில் அம்மா சமைத்த சாப்பாடு, அடுத்த நாள் நண்பர்களுடன் பெசன்ட் நகர், சத்யம் தியேட்டர் என வழக்கம் போல் சென்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நான் கிளம்ப வேண்டிய நாள், நாளை மீண்டும் அதே ஆபீஸ் அதே வேலை, பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டு மீண்டும் வேலைக்காக வெளியூர் செல்லும் போது நம் மனதில் ஏற்படும் அந்த வெறுப்பு கலந்த சோகத்தை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

“டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டியா, நானும் ஊருக்கு கிளம்பிடுவேன் அப்புறம் அது எங்க இது எங்கன்னு கேட்கக்கூடாது ” அம்மா சொல்ல

“எல்லாம் கரெக்டா இருக்கு நீ மொதல்ல கிளம்பு", என சொல்லியபடியே அன்று போராடி புக் செய்த டிக்கெட்டை பார்த்தேன், “CONFIRM S5/0025/LB” அட இந்த விஷயத்தை பார்க்கவே இல்லையே அதிசயமா லோவர் பெர்த் வந்திருக்கு.

வழக்கமா IRCTCல டிக்கெட் கிடைக்கிறதே அபூர்வம் இதுல லோவர் பெர்த் கிடைக்கிறது சத்யம் தியேட்டர்ல பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ டிக்கெட் கிடைக்கிற மாதிரி. இப்படி போய் பல மாசங்கள் ஆச்சு, எப்போதுமே எனக்கு புடிக்காத Side Upper சீட் மட்டுமே வரும்.

ஏன் அந்த பெர்த் மேல அப்படி ஒரு வெறுப்பு?  ஆறு அடிக்கு மேல வளந்தவுங்க இந்தியாவில Travel பண்ணவே கூடாது. பிளைட், பஸ், ட்ரைன், கார் என எல்லா இடத்துலயும் அடிவாங்காம இருக்கவே முடியாது. ஒரு தடவை சிட்டி பஸ்ல என் தலை பஸ்ஸோட கூரையில படுறத பார்த்துட்டு அந்த பஸ் கண்டக்டர்

“தம்பி நீங்க வேணும்னா கொஞ்சம் படிக்கட்டுல வந்து நில்லுங்க”,

ஒரு கண்டக்டரே வந்து படிக்கட்டுல நிக்க சொன்ன ஒரே ஆள் நானா தான் இருப்பேன், அந்த அளவுக்கு வளந்து தொலைச்சிட்டேன், வழக்கமா Side Upper பெர்த்ல நாலா மடிஞ்சு மடிஞ்சு படுக்க வேண்டியிருக்கும். இந்த தடவை ஏதோ நல்ல நேரம் போல டிக்கெட் அதுவும் லோவர் பெர்த் கிடைச்சிருக்கு.

மணி 9:15 சென்ட்ரல் ரயில் நிலையம்:

ஞாயிற்று கிழமைகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும், அந்த ரயிலுக்கு IT எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கலாம், அத்தனை சாப்ட்வேர் மக்களை அந்த ரயிலில் பார்க்கலாம்.


சிலர் ரயில் நிலையம் வந்த உடனே வேலையைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், அதிலும் சில ஞாணசூனியங்கள் அங்கேயே லேப்டாப்பை திறந்து அவுட்லூக்கில் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே என் ரயில்பெட்டி வாசலருகே உள்ள பயணிகள் பட்டியலை பார்த்தேன்,

25 – Ragunathan   M 25
26 – Nirmal       M 30
27 – VasanthKumar M 34
28 – Ragini       F 23

கைவிரல் 28டில் நின்றது, இன்று நமது அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கலாம் என முடிவு செய்தேன், அதை விட முக்கியம் நாங்கள் இருவரும் எதிரெதிர் லோவர் பெர்த், அந்நியன் படத்தில் அந்த ரயில் காட்சி மனதில் லேசாக எட்டிப் பார்த்தது. எல்லாவற்றை விட இன்பமான விஷயம் பக்கத்தில் இருபவர்களில், குழந்தைகளோ, வயசானவர்களோ அல்ல, அப்படி இருந்தால் அவர்கள் கண்டிப்பாக என் பெர்த்திற்கு அடி போடுவார்கள்.

என் இடத்தில் போய் அமர்ந்தேன் ராகினி வரவில்லை, வெளியே சென்று வாட்டர் பாட்டில் வங்கி விட்டு வர அவள் வந்திருந்தாள். அழகான முகம், Straight செய்த தலை முடி, டி ஷர்ட், ஜீன்ஸ், காதிலே iPod, சுருக்கமாக நான் தினம் தினம் என் அலுவலகத்தில் காணும் ஒரு சராசரி சாப்ட்வேர் பெண். பார்த்த முதல் தருணத்திலேயே “அட சே, இப்படி ஆயிடுச்சே, என தோன்றியது.

முன்பெல்லாம் அழகான பெண்களை பார்த்தால் கப்பென்று பற்றிக்கொள்ளும், இப்போ ரொம்ப நமத்துப்போயிருக்கேனே, ஒருவேளை இந்த மாதிரி மாடர்ன் பொண்ணுங்கள பார்த்துப் பார்த்து போர் அடிச்சிருச்சோ? என நான் யோசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நில நிற டி ஷர்ட் அணிந்த ஒருவன் என்னை பார்த்தபடியே சென்றான்.

யார் இவன் நம்மளையே பார்க்குறான், நம்ம ஆபீஸல வேலை பாக்குறவணா இல்லை நம்ம காலேஜ் பையனா. யோசிப்பதற்குள் அவன் விருட்டென்று சென்று விட்டான். யோசித்தபடியே அவளை பார்க்க அவளோ எங்கோ ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் என்னை பார்த்தால் ஒரு “ஹலோ” சொல்லலாம் என நினைத்துகொண்டிருக்க ரயில் கிளம்பியது, ஒரு ராத்திரி முழுசா இருக்கு எப்படியும் ஒருதடவையாவது பேசிடலாம் என முடிவு செய்தேன்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்த நீல நிற டி ஷர்ட் என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்தான்,

“சார் ஒரு சின்ன ஹெல்ப்!! எங்க அப்பா அவர் ஹர்ட் பேஷண்ட், அவருக்கு அப்பர் பெர்த் ஏற முடியாது, கம்பார்ட்மென்ட் புல்லா பார்த்துட்டேன் நீங்க மட்டும் தான் கொஞ்சம் young person, exchange பண்ண முடியுமா”

கொஞ்சம் நேரம் ஒரு பொண்ணை பார்த்தது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கல போல, ஹர்ட் பேஷண்ட்டுன்னு வேற சொல்றான், என்னால் மறுக்க முடியவில்லை

“No problem!!! சீட் எங்க” நான் கேட்க

அவன் முகத்தில் ஒரு சந்தோஷம், “ரொம்ப தேங்க்ஸ், இந்த கம்பார்ட்மென்ட் தான், சீட் நம்பர் 40”

என் பையை எடுத்துக்கொண்டு ராகிணிக்கு டெலிபதி மூலமாக Bye சொல்லிவிட்டு நாற்பதாம் நம்பர் சீட்டிற்கு வந்தேன், அப்போது தான் தெரிந்தது, இது வெறும் அப்பர் பெர்த் கிடையாது சைடு அப்பர். மறுபடியும் நாலா மடிச்சு படுக்கணுமா, என் விதியை நொந்து கொண்டே மேல ஏறி உட்கார செல்போன் என்னை அழைத்தது. யாரென்று பார்த்தால் அம்மா.

வழக்கமாக ரயில் ஏறியவுடன் அம்மாவிடம் call செய்து சொல்லுவேன் இந்த முறை  ராகினியை பார்த்துக்கொண்டே அம்மாவை அழைக்க மறந்து விட்டேன்.

“ஹலோ அம்மா “

“என்னடா ட்ரைன் ஏறிட்டியா”

“ட்ரைன் கிளம்பிடுச்சு!!! உன் ட்ரைன் எங்க போகுது“

“இங்க தான் செங்கல்பட்டு கிட்ட போய்க்கிட்டு இருக்கு, அப்புறம் என் டிக்கெட் இருக்குல... அது RACல இருந்து இன்னைக்கி தான் confirm ஆச்சு.... ஆனா அப்பர் பெர்த்துதான் கிடைச்சுது, என்னால எப்படி ஏற முடியும், அப்புறம் இங்க உன் வயசுல ஒரு பையன் லோவர் பெர்த்துல இருந்தான்...... அவன் கிட்ட, 'தம்பி என்னால மேல ஏற முடியாதுப்பா கஷ்டம்ன்னு' சொன்னேன், அந்த பையன் அவன் பெர்த்தை கொடுத்துட்டான், காலையில நாகர்கோயில் போயிடும், நீ பெங்களூர் போனவுடனே call பண்ணு சரியா?”

என்னால் அதற்கு மேல் பேசமுடியவில்லை “சரிம்மா காலையில call பண்றேன்”

செல்போனை வைத்துவிட்டு காலை நாலாக மடித்து மேலே பார்த்தேன் ஆண்டவன் இருகிறானா என்று, ரயில் கூரைதான் தெரிந்தது, கேமரா அப்படியே என்னை விட்டு zoom out ஆகி பின்னால் கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே செல்ல ரயில் வில்லிவாக்கத்தைத் தாண்டி பெங்களூர் சென்று கொண்டிருந்தது.


Image Courtesy : http://www.flickr.com/photos/godvivek/483490156/


Thursday, January 17, 2013

தலைவா !!!!!


சின்ன வயசில் தலைவர் படத்தைப் பார்த்துவிட்டு, பள்ளியில் சிகரட்டை போல் பென்சிலை பாவித்து தூக்கிப்போட்டு பிடித்ததுண்டா ? பென்சில் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் ரப் நோட்புக் பேப்பரை கிழித்து சிகரட் தயார் செய்ததுண்டா? கமல் என்ன தான் சூப்பராக நடித்தாலும் “சூப்பர் ஸ்டார் மாதிரி வருமாடா” என்று நண்பர்களோடு சண்டை போட்டதுண்டா? படையப்பா படத்தில் தலைவர் சொல்லும் எல்லா வசனமும் அத்துப்படியா ?


இக்கேள்விகளுக்கு பதில் ஆம் என்றால் நீங்களும் என் போல் ரஜினி ஒரு என்ற சொல்லில் மயங்கியவன். இத்தனை நாளா நமக்கு இவ்வோளோ செஞ்சுருக்கானே இவனுக்கு எதாவது செய்யணும் என்று ஒரு முறை தலைவர் என்னை குறி வைத்தார், அதுவே இந்த பதிப்பின் நோக்கம்.... இது கதையல்ல நிஜம்!!!


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விஷயம் சாப்ட்வேர் வேலையில் நொந்து நூடுல்ஸ் ஆன சமயம்.

“அம்மா நான் MBA படிக்கலான்னு இருக்கேன்” நான் சொன்னதை கேட்டு அம்மாவுக்கு பயங்கர ஆச்சரியம், அப்பாவுக்கோ பயங்கர கோபம்

“டேய் என்னடா புதுக்கதை சொல்ற”

“இல்லப்பா MBA படிச்சா நல்ல value….

“அது தெரியும் இப்போ என்ன திடீர்ன்னு...” என அப்பா கேட்க அம்மா குறுக்கிட்டாள்

“சரி உன் ஸ்கூல் காலத்துலேருந்து படி படின்னு நாங்க சொன்னபோது நீ கேட்டதே இல்லை, வாழ்க்கையல மொத தடவையா நீயே படிக்கணும்னு சொல்ற... சரி சிக்கிரம் எங்க சேரணும் என்ன பண்ணும் எல்லாத்தையும் பாரு”

ஹை கோர்ட் கோபப்பட்டாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு சாதகமாக அமைந்தது.

ஆனால் MBA படிப்பதை விட அதை படிக்க ஒரு கல்லூரியில் சேருவது எப்படி பட்ட ஒரு அப்பாட்டக்கரான விஷயம் என்பது அப்புறம் தான் தெரிந்தது.

CAT, GMAT, JMET, XAT, CMAT, SNAP....  இதெல்லாம் MBA படிக்க நாம் எழுத வேண்டிய பரிட்சைகள், இதில் சில பரிட்சைகளின் full form கூட எனக்கு இன்னவரை தெரியாது. இப்பரிட்ச்சைகளில் பிரதானமானது CAT, என்னைக் கேட்டால் இந்த பரிட்சைக்கு DINOSAUR என்று பெயர் வைத்திருக்கலாம்.

இதெல்லாம் எப்படி படிக்கிறது என யோசிச்ச போது, என் அலுவலகத்தில் இருந்த ஒரு வட இந்திய நண்பன் துணைப் புரிந்தான். இதற்காக பல கோச்சிங் கிளாஸ் இருப்பதாகவும் அங்கு சேர்ந்தால் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் என்றான். கோச்சிங் கிளாஸ் என்றவுடன் பிளஸ் டூவில் பெண்களை பார்பதற்காகவே சேர்ந்த கோச்சிங் கிளாஸின் ஞாபகங்கள் மனதில் ஓடின.

அடையாரில் ஒரு சென்டரில் சேர்ந்தேன்,

“நாளைக்குக் காலையில வந்திருங்க, அந்த batch ஆரம்பிச்சு two classes தான் போயிருக்கு, you can catch up”

முதல் நாள் காலையில் அடித்துப் பிடித்து சென்றேன் வழக்கம் போல் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து வகுப்பை நோட்டம் விட்டேன், சும்மா சொல்லக் கூடாது வகுப்பில் மூன்று அழகான பெண்கள்.

“டேய் இதே மாதிரி பிளஸ் டூ entrance கோச்சிங் போய் கோட்டை விட்ட, மறுபடியும் வேண்டாம்” என் மனசாட்சி வடிவேலு ஸ்டைலில் அழுக, சரி உருப்படுவோம் என முடிவெடுத்தேன்.

சிறிது நேரத்தில் வகுப்பு நிரம்ப முதல் நாள் பாடம் ஆரம்பமானது, கையில் ஏதோ ஒரு பேப்பர் கொடுத்து அதில் இருக்கும் சில கணக்குகளை செய்ய வேண்டுமாம், எல்லாரும் ஏதோ செய்ய முற்பட எனக்கோ எங்கு ஆரம்பிப்பது என்ன செய்வது, இது என்ன கணக்கு என ஒன்றும் புரியவில்லை.

இதற்க்கு முன் நான் கடைசியாக நான் படித்த கணக்குப் பாடம் Engineering Mathematics-3, சுருக்கமாக M3, “M3 கிளியர் செய்வது எப்படி!!!” என புத்தகம் எழுதும் அளவுக்கு Strong Foundation, மூன்றாம் செமஸ்டர் பேப்பரை 5 முறை எழுதி எட்டாவது செமஸ்டரில் என் பேப்பரை காண சகிக்காமல் Anna University என்னை பாஸ் செய்து வைத்தது.

இப்படி பட்ட எனக்கு அந்த கணக்கு First Ball yorker போல் இருந்தது, சிறிது நேரம் கழித்து,

“Have you solved the problem?” என அங்கு வந்த ஆசிரியர் கேட்டதற்கு

“இதற்கு problem என பேரு வச்சவனை முதல்ல கண்டுபிடிக்கணும்” என மனதில் தோன்றியது.

ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து

“Sir If we use Binomial Thoerem we can find the coefficient of the missing factor...”என ஆரம்பித்தபோது எனக்கு “Cosmic Energy Coupled With Kinetic Energy in the evolution of mankind with the program of Java” போல் இருந்தது.

நான் மட்டும் தான் இப்படி என யோசித்த போது எனக்கருகில் ஒருவன் ரொம்ப தீவிரமாய் அந்த கணக்கை ... சாரி Problem ....அதை solve செய்துகொண்டிருந்தான்,  

“ஹலோ உங்களுக்கு புரிஞ்சுதா?” என நான் கேட்க

“இல்லங்க!!! நான் நேத்து கிளாசுக்கு வரல, ஒண்ணுமே புரியல, நேத்து கிளாசுல தான் இதை டீச் பண்ணியிருக்கணும்” என்றான்

“அப்பாடா !!! நான் மட்டும் தான் பல்புன்னு நினைச்சேன், ” மனதிற்குள்ளே சொல்லிகொண்டேன்.

“அப்படியா, நானும் புதுசு, இன்னைக்கி தான் ஜாயின் பண்ணினேன் எனக்கும் ஒன்னும் புரியல, anyways I am Raghu”  என்றேன்

“I am Arun” என்று பதில் அளித்தான்

“வொர்க் பண்றீங்களா?” என நான் கேட்க

“எஸ் TCS!! நீங்க? “

“நானும் உங்கள போல தான் சாப்ட்வேர், Keaneல  வொர்க் பண்றேன்”

“Keane, கேள்வி பட்டிருக்கிறேன், நுங்கம்பாக்கம் தானே உங்க ஆபீஸ் “

“எஸ் எஸ்... CAT first டைம் ?“

“ஆமா !!! என்ன பண்றதுனே தெரியல.... எல்லாம் ஆண்டவன் கையல இருக்கு” என வானத்தைப் பார்த்து சொன்னான்.

ஒரு சில வாரங்களில் நானும் அருணும் நல்ல நண்பர்களானோம், ஒவ்வொரு வாரமும் mock CAT என்ற ஒன்று நடைபெறும், அதாவது இந்தியாவில் என்னைப் போல் பைத்தியம் பிடித்த... சாரி MBA படிக்க விரும்பும் அனைவரும் ஒன்று கூடி CAT போலவே ஒரு பரிட்சையை எழுதுவார்கள், அதில் வரும் மதிப்பெண்களை வைத்து நமக்கு இறுதி பரிட்சையில் எவ்வளவு தேறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு வாரமும் அருண் என்னை அழைப்பான்

“ரகு இந்த Mock CAT எப்படி ?”

“ரொம்ப மோசம் அருண்... உங்களுக்கு எப்படி ?”

“நீங்க வேற, நான் காலி? “

இருவரும் எங்கள் பரிதாபங்களை பகிர்ந்த பிறகு,

நான், “அருண் நாம தேறுவோமா,  எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு, போறப் போக்க பார்த்தா B ஸ்கூல் பக்கம் போகவே முடியாது போல”

அப்போது தான் தலைவர் முதன் முதலாக அருண் மூலமாக வேலையை ஆரம்பிக்கிறார்

“ரகு, தலைவர் படம் பார்த்திருக்கீங்களா ?”

“என்ன கேள்வி இது அருண்... ரஜினி படம் ஒண்ணுவிடாம பார்த்திருக்கேன் “

“ஒரு படத்துல ஒரு punch dialogue இருக்கு ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’, அது போல தாங்க இந்த B ஸ்கூல்... கிடைக்கன்னும்னா கண்டிப்பா கிடைக்கும்”

“அருண் அந்த வசனத்தோட இரண்டாவது பார்ட் தாங்க பிரச்சினையே....”

“என்ன பிரச்சனை ?”

“ ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’.... இப்படிதாங்க வாழ்க்கைல பல விஷயங்கள் கிடைக்காம போயிருச்சு”

“பாசிடிவா யோசிங்க... நான்  பிரச்சனை வரும் போது இந்த வசனத்த தான் சொல்லிப்பேன் ALL IS WELL மாதிரி”

“ஏதோ அருண் கெடைச்சா சரி”

இப்படி சில வாரங்கள் செல்ல ஒரு நாள் அருண் “இந்த saturday ஒண்ணா சேர்ந்து prepare பண்ணுவோமா before sunday`s mock CAT?”

எனக்கும் அது சரி என தோன்றியது, இருவரும் சேர்ந்து இந்த பூணைக்கு மணி கட்டும் வித்தையை கற்க முற்பட்டோம், Aptitude, Reasoning என பல விஷயங்கள் பேசி Tired ஆகிவிட்டோம்,

“ரகு கொஞ்ச நேரம் பிரேக் எடுப்போம்” என டிவியை தட்ட... சன் டிவியில் படையப்பா, CAT எல்லாம் அப்புறம் என முடிவு செய்தோம், படையப்பாவை தொடர்ந்தோம்.

என்னைப் போலவே அருணுக்கும் படையப்பாவின் வசனங்கள் அத்துப்படி, கணிதம் Aptitude, Reasoning என பேசிக்கொண்டிருந்த நாங்கள் பாஷா, முத்து, சிவாஜி என பேச ஆரம்பித்தோம். இறுதியில் இன்றைய தேதியில் டிவியில் சிவாஜி போட்டால் கூட பலர் பார்க்கமாட்டார்கள் ஆனால் படையப்பாவோ பாஷாவோ போட்டால் எல்லாரும் பார்ப்பார்கள் என்ற கருத்தை ஆணித்தனமாக நம்பினோம்.

அடுத்த நாள் எழுதின MOCK CAT அற்புதமாக சென்றது, எனக்கே ஆச்சரியம் வழக்கமாக புஸ் ஆகும் பரிட்சை பின்னி பெடல் எடுத்தது. கனவில் கூட எதிர்பார்க்காத percentile எனக்கு கிடைத்தது. தலைவர் படத்த பார்த்துட்டு போன நேரம் நல்லா வொர்க் அவுட் ஆகுது என நம்பினேன், அருணும் அதை ஆமோதித்தான்.

வீட்டில் இனி prepare செய்யும் போது அண்ணாமலையில் வந்த “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்” படையப்பாவில் வந்த “வெற்றிக் கொடி கட்டு “ போன்ற பாடல்கள் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தன.

அருண் ஒரு படி மேலே சென்று “போடா!!! அந்த ஆண்டவனே என் பக்கம்” என்ற தலைவர் வசனத்தை ரிங் டோனாக வைத்தான்.

இறுதியாக அந்த நாளும் வந்தது என் பல மாத உழைப்பைக் காட்டும் நேரம். பல பரிட்சைகள், பல விண்ணப்பங்கள், பல ஆயிரம் செலவானது.

ஆனால் எப்போதும் போல் பரிட்சையின் முடிவுகள் புஸ்!!!... SNAP தவிர வேறு எதிலும் எனக்கு நல்ல ஸ்கோர் வரவில்லை, அருணுக்கோ XAT, JMET  கைகொடுத்தது.

SNAP ஸ்கோரை அணுமதிக்கும் கல்லூரிகளில் இரண்டில் மட்டுமே நான் விண்ணப்பிக்க அதில் ஒன்றில் மட்டுமே எனக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது, அருண் கைவசம் ஒரு நான்கைந்து அழைப்புகளை வைத்திருந்தான்.

“அருண் ஒரே ஒரு call, இதை எப்படி convert பண்றது, காலின்னு நினைகிறேன்”

“ரகு இந்த காலேஜ் நல்ல காலேஜ் தானே convert பண்ணலாம், தலைவர் சொன்னத ஞாபகம் வச்சுகோங்க ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’ இந்த call வந்திருக்குன்னா காரணமில்லாமல் இல்லை “

நேர்காணல் தேதியும் வந்தது மார்ச் 7, என் பிறந்த நாள், இதை நான் அருணிடம் சொல்ல 

“இதை விட நல்ல சகுனம் கிடையாது, தலைவர் சொன்ன மாதிரி ‘அந்த ஆண்டவனே உங்க பக்கம் இருக்கான்’... All The Best”

March 7 2010

நேர்காணலுக்கு என்னைப் போல் பலர் வந்திருக்க அதில் தமிழ் முகம் எதாவது தெரிகிறதா என பார்த்தேன் தென்படவில்லை, எங்கு பார்த்தாலும் வடஇந்தியக் காற்று, ஹிந்தி பேச்சு எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நம் தமிழர்கள் ஏன் இந்த MBA மீது அப்படி ஒரு அக்கறை காட்டுவதில்லை ?

சுற்றி இருக்கும் எல்லோரும் Finance, Mortage, Mid Cap என ஏதேதோ பேச ஆரம்பிக்க, “கடவுளே, மொக்கையா ஏதாவது பேசி  பெருசா பலப் ஏதும் வாங்கக் கூடாது” என முடிவெடுத்து அமைதியைக் கடைபிடித்தேன்

அந்த நேரமும் வந்தது என் நேர்காணலில் இரண்டு பிரிவு உண்டு ஒன்று மீன்சந்தை போல் இருக்கும் Group Discussion சுருக்கமாக GD, இன்னொன்று Verbal Diarrhea  என சொல்லப்படும் Personal Interview.

இப்போது என்னுடன் ஒரு ஆறு பேரையும் சேர்த்து மீன்சந்தைக்கு அழைத்தார்கள். உள்ளே சென்ற பிறகு தான் சந்தை அன்றைக்கு விடுமுறை என்று அறிவித்தார்கள்

ஆம் உள்ளே சென்றவுடன் அங்கு Interview Panelலில் இருக்கும் ஒருவர்

“See guys im quite fed up of this group discusssion process, the previous batch performed very badly, so lets make it an Extempore” எனக் கூற

Extemporeஅப்புடீனா ஒ!!! இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போல என கௌண்டமணி ஸ்டைலில் யோசித்தேன் (அதுவும் தலைவர் படம் தான்)

நான் இப்படி பேந்த பேந்த முழிப்பதை பார்த்து விட்டார் போல Extempore என்றால் என்ன என்பதை விளக்கினார்.

1. எல்லோர் முன்னிலையில் நாம் சென்று நிற்க, நடுவர்கள் ஒரு தலைப்பைக் கொடுப்பார்கள்.

2. அந்த தலைப்பை சொன்னவுடன் அதை பற்றி மூன்று நிமிடங்கள் இடை விடாமல் பேச வேண்டும்.

3 ஒரு முறை பேசிய விஷயத்தை மறுபடியும் கூறக் கூடாது.

ஆகா GDயில் ஏதாவது பக்கத்தில் இருப்பவன் பாயிண்ட்டை திருடி மழுப்பிவிடலாம் இதில் முடியாதே என நினைத்திருக்கும் போதே முதல் மாணவனை அழைத்தார்.

அவனைப் பார்த்து அவர் அருகில் இருந்த கிளாசை காண்பித்தார் அதில் பாதி Coca-cola இருந்தது, “ Your time starts now”  என்றார்

“பாதி கிளாஸ் கூல்ட்ரிங்க்ஸ் இருக்கு, மீதிக்கு சரக்கு நிரப்பி அடிக்கலாம் இதுல என பேச முடியும்”,  என யோசித்தபோது, அந்த மாணவன் “Glass is half empty half full...optimism, Positive attitude... negative way of looking” என அந்த தலைப்பை பின்னி எடுத்துவிட்டான்,

“எத்தனை தடவை கிளாஸ் use பண்ணியிருக்கோம் நமக்கு இது ஒரு தடவை கூட தோணலயே” என மனது சிந்திக்க ஆரம்பித்தது.

அடுத்த மாணவன் வர அவனுக்கு தலைப்பு “Test vs T20”... எனக் கூற, எனக்கோ “சார் இந்த topicல நான் பேசுறேன் சார் பல மாட்சுகள் பார்த்து பல எக்ஸாம் கோட்டை விட்டவன் சார் நான்,....... ஒரு முழு டெஸ்ட் மேட்ச் பார்கிறவன் சார் நான்” என மனது சொல்லத் துடித்தது ஆனால் அமைதி காத்தேன். அந்த மாணவனும் அந்த தலைப்பிற்கு ஏற்றார் போல் அற்புதமாக பேசினான்.

மூன்றாவது தலைப்பு “Economic Recession vs GDP” ...இந்த தலைப்பு எனக்கு வந்தால் நான் காலி என நினைத்தேன். அதே போல் இவன் கொஞ்சம் திக்கி தெனற ஆரம்பித்தான் நடுவில் சில வினாடிகள் மௌனம் சில வார்த்தைகள் மீண்டும் சொல்லி, அவனால் அந்த தலைப்பில் பேச முடியவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆண்டவா!!! இந்த மாதிரி நமக்கு வந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்

அடுத்ததாக நான், உலகிலுள்ள எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டேன், கோர்ட்டில் குற்ற்றவாளி கூண்டில் நிற்பதை போல் நான் நிற்க, அந்த நடுவர்கள் என்னை பார்த்தார்கள் ஏதோ பேசினார்கள் பின்பு தான் அந்த வார்த்தை என் காதில் ஒலித்தது

“Rajinikanth.... your time starts now”

மூன்று நிமிடங்கள் என்ன மூன்று வருடங்கள் பேசுவேன், இன்று வரை நான் அங்கு முழுவதுமாக என்ன பேசினேன் என்பது ஞாபகம் இல்லை, ஆனால் நான் பேசும் போது எனக்குள் கேட்ட குரல் மட்டும் நன்றாக நினைவில் உள்ளது, அவன் என் மனசாட்சி, அவன் சத்தமாக கூறினான்.

“தலைவா !!!!!!!!!!!”

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More